ஸ்டுடியோ துவங்க ரூ.15 லட்சம்: கோ ஆப்டெக்சுக்கு நிதியுதவிஸ்டுடியோ துவங்க ரூ.15 லட்சம்: கோ ஆப்டெக்சுக்கு நிதியுதவி ... ரயில் முதல் வகுப்பு கட்டணம் உயர்வு! ரயில் முதல் வகுப்பு கட்டணம் உயர்வு! ...
வரத்து குறைவால் தேங்காய் ரூ.25க்கு விற்பனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 அக்
2013
12:52

விருதுநகர்: வறட்சியால், வரத்து குறைந்து, விருதுநகர் மார்க்கெட்டில், 15 ரூபாய்க்கு விற்ற தேங்காய் ரூ.25க்கு விற்பனையாகிறது . ""பண்டிகை காலம் வருவதால், விலை மேலும் உயரும்,'' என வியாபாரிகள் தெரிவித்தனர்.

விருதுநகர் மார்க்கெட்டிற்கு, கன்னியாகுமரி,பொள்ளாச்சியில் இருந்து, தினமும் பல லாரிகளில், தேங்காய் லோடு வரும். பருவமழை பொய்த்து, வறட்சி நிலவுவதால், விளைச்சல் குறைந்து, தேங்காய் வரத்து சரிந்துள்ளது. இதனால், கடந்த 10 நாட்களுக்கு முன், 15க்கு விற்ற தேங்காய், தற்போது 25 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சரஸ்வதி பூஜை, தீபாவளி பண்டிகை வர உள்ள நிலையில், தேங்காய் விலை மேலும் உயரும், எனத் தெரிகிறது.

விருதுநகர் வியாபாரி சண்முகம்,"" முன்பு எண்ணிக்கை கணக்கில், தேங்காய் வாங்கினோம். அளவில் சிறியது, பெரியது என பிரச்னை வந்ததால், இப்போது கிலோ கணக்கில், தேங்காய் வாங்குகிறோம். 1 கிலோ 13 ரூபாய்க்கு வாங்கிய நிலையில், வரத்து குறைவால், தற்போது 1 கிலோ 22 ரூபாய் வரை விற்கிறது. லாரி வாடகை, தொழிலாளர் செலவு என கணக்கிட்டு பார்த்தால், 25 ரூபாய் வரை விலை உயர்வு வரும்.

வீட்டுத்தேவைக்கு, வாரத்திற்கு 3 தேங்காய்களை வாங்குவோர், விலையைக்கேட்டு விட்டு, 2 மட்டுமே வாங்கிச் செல்கின்றனர். இன்னும், சிலமாதங்களுக்கு இந்த விலை உயர்வு இருக்கும். விலையை குறைத்தால், எங்களுக்கு நஷ்டம் ஏற்படும்,'' என்றார்.

விருதுநகர் சுபாஷினி,""அத்தியாவசியப் பொருட்களுடன் தேங்காய் விலையும் உயர்ந்து விட்டது, கவலையளிக்கிறது. இன்னும் சிலமாதங்களுக்கு, இதே நிலை தான் நீடிக்கும் என்கிறார்கள். இப்படியே போனால், தேங்காய் சார்ந்த உணவு சமைப்பதை குறைத்துக்கொள்ள வேண்டியது தான்,'' என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)