பதிவு செய்த நாள்
07 அக்2013
00:22
புதுடில்லி:கோதுமை ஏற்றுமதிக்கு அரசு நிர்ணயித்ததை விட, குறைவான தொகையை குறிப்பிட்ட, 11 நிறுவனங்களின் ஒப்பந்தப் புள்ளிகள் நிராகரிக்கப்படும் என, தெரிகிறது.கடந்த ஆகஸ்ட் மாதம், பொருளாதார விவகாரங் களுக்கான அமைச்சரவைக் குழு, 20 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கியது. இதற்கான குறைந்தபட்ச ஏற்றுமதி தொகை, டன்னுக்கு, 300 டாலர் என, நிர்ணயிக்கப்பட்டது.
இதையடுத்து, பொதுத்துறையை சேர்ந்த, எஸ்.டி.சி., எம்.எம்.டி.சி., பி.இ.சி., ஆகிய நிறுவனங்கள், கோதுமை ஏற்றுமதிக்கான ஒப்பந்த புள்ளிகளை கோரின.இதில், கார்கில், எம்சன்ஸ், ஸ்டார்காம் உள்ளிட்ட, 11 நிறுவனங்கள் பங்கேற்றன. இவை, அதிகபட்சமாக, டன்னுக்கு, 267 டாலரும், குறைந்தபட்சமாக, 260.08 டாலரும் ஒப்பந்த புள்ளியில் குறிப்பிட்டுள்ளன.இது, அரசு நிர்ணயித்த, 300 டாலரை விட குறைவாகஉள்ளதால், வர்த்தக செயலர் தலைமையிலான,அதிகாரமிக்க குழு, ஒப்பந்த புள்ளிகளை நிராகரிக்கும் என, தெரிகிறது.தற்போது சர்வதேச சந்தையில், கோதுமை விலை குறைந்துள்ளதால், ஏற்றுமதி நிறுவனங்கள், குறைந்த விலையை குறிப்பிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|