இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு ரூ.61.79இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு ரூ.61.79 ... தங்கம் விலை ரூ.128 உயர்ந்தது தங்கம் விலை ரூ.128 உயர்ந்தது ...
ரூ.1.44 கோடிக்கு காய்கறி விற்பனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 அக்
2013
11:03

பொள்ளாச்சி :பொள்ளாச்சி உழவர் சந்தையில் செப்., மாதத்தில் ஒரு கோடியே 44 லட்சத்து
98 ஆயிரத்து 60 ரூபாய்க்கு காய்கறிகள் விற்பனையாயின. காய்கறிகளின் வரத்து அதிகமாக இருந்ததால், விலை குறைந்து விற்பனையானது வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பொள்ளாச்சி நகராட்சி கட்டடத்துக்கு அருகே, உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இதில், 160 க்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். கோமங்கலம்புதூர், சோமந்துரை சித்தூர், கானல்புதூர், வடக்கிப்பாளையம் உள்ளிட்ட பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன. தினந்தோறும் 80 மேற்பட்ட விவசாயிகளும், 2,500க்கு மேற்பட்ட பொதுமக்களும் இதை பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் மழை நன்றாக பெய்ததால், பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் காய்கறி சாகுபடியில் இறங்கினர். தற்போது விளைச்சலாகும் காய்கறிகள், உழவர் சந்தைக்கு வரத்துவங்கியள்ளன. நாள்தோறும் காய்கறி வரத்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆக., விட, செப்., மாதத்தில் காய்கறி வரத்து அதிகமாகி விலை குறைவாக விற்பனையானது. முக்கியமாக, கிலோவிற்கு கத்திரி 44 ல் இருந்து 24 ரூபாய்; பச்சை மிளகாய் சம்பா 34ல் இருந்து 16 ரூபாய்; குண்டு மிளகாய் 40ல் இருந்து 18 ரூபாய்; பெரிய வெங்காயம் 50 ல் இருந்து 38 ரூபாய்; பீட்ரூட் 20ல் இருந்து 14 ரூபாய்; முள்ளங்கி 20ல் இருந்து 10 ரூபாய்; சுரக்காய் 14ல் இருந்து எட்டு ரூபாய் என, அதிரடியாக விலை குறைந்து விற்பனையாகின.
கடந்த இரண்டு மாதங்களிலும் காலிப்பிளவர் 28 ரூபாய், இஞ்சி 80 ரூபாய், உருளை 20 ரூபாய், வாழைக்காய் 24 ரூபாய், பாகற்காய் 30 ரூபாய் என, எந்தவித மாற்றமும் இல்லாமல்
விற்கப்பட்டன. மேலும், பீன்ஸ், பூசணி, சேனைக்கிழங்கு, முருங்கைகாய், அவரை, பீர்க்கங்காய் மற்றும் தக்காளி போன்றவை அதிகளவில் எந்தவித மாற்றம் இல்லாமல் இரண்டு முதல் ஐந்து ரூபாய் விலை வித்தியாசத்தில் விற்பனையாகின.

கடந்த செப்., மாதத்தில் 5 லட்சத்து 64 ஆயிரத்து 290 கிலோ காய்கறி வரத்து இருந்தது. நாளொன்றுக்கு 80 பேர் வீதம் 2,411 விவசாயிகள் காய்கறி விற்பனைக்காக வந்து இருந்தனர். 94 ஆயிரத்து 49 வாடிக்கையாளர்கள், உழவர் சந்தையை பயன்படுத்தி இருந்தனர்.
கடந்த மாதத்தில் உழவர் சந்தையில் ஒரு கோடியே 44 லட்சத்து 98 ஆயிரத்து 60 ரூபாய்க்கு வர்த்தகம் இருந்தது. இது, ஆக., மாதத்தை விட 85 ஆயிரத்து 900 ரூபாய் கூடுதலாகும்.
இதுகுறித்து உழவர் சந்தை அதிகாரிகள் கூறுகையில், "கடந்த ஆக., மாதத்தில் கேரளத்தில் ஓணம் பண்டிகையொட்டி காய் விலை உச்சத்தில் இருந்தது. செப்., மாதத்தில் சந்தைக்கு காய்
கறிகளின் வரத்து அதிகமாக இருந்ததால், அனைத்து காய்கறிகளின் விலையும் குறைந்து காணப்பட்டது. அதனால், வாடிக்கையாளர்களின் வரத்தும், விற்பனையும் அதிகமாக இருந்தது. இந்த மாதத்திலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது'' என்றனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)