பதிவு செய்த நாள்
08 அக்2013
04:11
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் துவக்க தினமான நேற்று, அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.அமெரிக்க அரசியலில் அசாதாரணமான சூழல் தொடர்வதால், சர்வதேச பங்குச் சந்தைகள் சரிவைக் கண்டன.இந்தியாவில், வங்கிகளின் வசூலாகாத கடன் அதிகரித்துள்ளதால், அது, இரண்டாம் காலாண்டில், அவற்றின் சொத்து மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால், நேற்று வங்கிப் பங்குகளின் விலை சரிவைக் கண்டன.அதே சமயம், மென்பொருள் சேவை ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள, ஐ.டி. நிறுவனங்களின் பங்குகளுக்கு தேவை அதிகம் இருந்தது.
நேற்றைய வியாபாரத்தில், வங்கி, எரிபொருள், பொறியியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.அதேசமயம், ஐ.டி., உலோகம், ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை அதிகரித்து காணப்பட்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 20.85 புள்ளிகள் சரிவடைந்து, 19,895.10 புள்ளிகளில் நிலைகொண்டது.வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 19,921.38 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,647.88 புள்ளிகள் வரையிலும் சென்றது.
‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், டி.சி.எஸ்., ஹிண்டால்கோ, டாட்டா ஸ்டீல் உள்ளிட்ட, 17 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க், எச்.டீ.எப்.சி., பேங்க், கோல் இந்தியா உள்ளிட்ட, 13 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 1.15 புள்ளிகள் குறைந்து, 5,906.15 புள்ளிகளில் நிலைபெற்றது.வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,912 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,825.85 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|