பதிவு செய்த நாள்
08 அக்2013
10:40
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 223.77 புள்ளிகள் அதிகரித்து 20118.87 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 67.90 புள்ளிகள் அதிகரித்து 5974.05 புள்ளிகளோடு காணப்பட்டது. நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் துவக்க தினமான நேற்று, அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.அமெரிக்க அரசியலில் அசாதாரணமான சூழல் தொடர்வதால், சர்வதேச பங்குச் சந்தைகள் சரிவைக் கண்டன.இந்தியாவில், வங்கிகளின் வசூலாகாத கடன் அதிகரித்துள்ளதால், அது, இரண்டாம் காலாண்டில், அவற்றின் சொத்து மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால், நேற்று வங்கிப் பங்குகளின் விலை சரிவைக் கண்டன.அதே சமயம், மென்பொருள் சேவை ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள, ஐ.டி. நிறுவனங்களின் பங்குகளுக்கு தேவை அதிகம் இருந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|