தேயிலை உற்பத்தி 2.23 சதவீதம் உயர்வு தேயிலை உற்பத்தி 2.23 சதவீதம் உயர்வு ... ஆப­ரண தங்கம் விலைசவ­ர­னுக்கு ரூ.216 அதிகரிப்பு ஆப­ரண தங்கம் விலைசவ­ர­னுக்கு ரூ.216 அதிகரிப்பு ...
2015ல் இந்திய மொபைல் இணைய பயனாளர் 16.48 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 அக்
2013
16:12

இந்தியாவில் மொபைல் போன் வழியே இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது குறித்தும் இதன் சமுதாய, பொருளாதார தாக்கம் குறித்து ஆய்வு செய்து வரும் கே.பி.எம்.ஜி. அமைப்பு, வரும் 2015 ஆம் ஆண்டில், இந்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 16 கோடியே 48 லட்சமாக உயரும் என அறிவித்துள்ளது.
இதனால், இணையம் வழி சந்தை வாய்ப்புகள் பெரும் அளவில் பெருகி வருகிறது. சீனாவிற்கு அடுத்தபடியாக, மொபைல் வழி சந்தை வாய்ப்புகள், இந்தியாவில் தான் இருக்கும் எனவும் இந்த அமைப்பின் ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது. சமுதாய இணைய தளங்களின் பயன்பாடும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மொபைல் போன்கள் உட்பட பல்வேறு டிஜிட்டல் சாதனங்கள் வழியே இந்த பயன்பாடு உயர்ந்து வருகிறது. இந்த தளங்கள் மூலம், வர்த்தக நிறுவனங்கள் தங்கள் வர்த்தக பொருட்களின் மதிப்பை உயர்த்த பல வழிகளைப் பெற்று வருகின்றனர். தனி நபர் இணையப் பயன்பாடு, குறிப்பாக சமூக இணைய தளப் பயன்பாடு, வர்த்தக வாய்ப்புகளை உயர்த்தி வருகிறது. இப்பழக்கத்தினை, மக்கள் வாங்கும் விலையில், தற்போது சந்தைக்கு வந்து கொண்டிருக்கும் ஸ்மார்ட் போன்களும் அதிகரிக்கச் செய்து வருகின்றன.சமூக இணையப் பரிவர்த்தனை என்பது, பேஸ்புக், ட்விட்டர், லிங்க்டு இன் தளங்களில் மட்டுமின்றி, யு ட்யூப், வலைமனைத் தளங்கள் போன்றவை மூலமும் அதிகமாகி வருகிறது. இதனைப் பயன்படுத்தி, பல மீடியா நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் இணையத்தில் இடம் பெற்று, தங்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையையும், வர்த்தகத்தினையும் உயர்த்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)