ஆப­ரண தங்கம் விலைசவ­ர­னுக்கு ரூ.216 அதிகரிப்புஆப­ரண தங்கம் விலைசவ­ர­னுக்கு ரூ.216 அதிகரிப்பு ... இந்­திய ரயில்­வேயின்வருவாய் ரூ.65,355 கோடி இந்­திய ரயில்­வேயின்வருவாய் ரூ.65,355 கோடி ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
நிலக்­க­டலை உற்­பத்­தியில் இந்­தியா சாதனை படைக்கும் குஜ­ராத்தின் பங்­க­ளிப்பு மூன்று மடங்கு உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 அக்
2013
00:38

புது­டில்லி:நாட்டின் நிலக்­க­டலை உற்­பத்தி, நடப்­பாண்டு கரீப் பரு­வத்தில் (ஜூன்–செப்.,) 55.69 லட்சம் டன்­னாக உயரும் என, மத்­திய வேளாண் அமைச்­ச­கத்தின் முத­லா­வது முன்­கூட்­டிய மதிப்­பீட்டு அறிக்­கையில் தெரி­விக்­கப்­ பட்­டுள்­ளது.சென்ற ஆண்டின் இதே காலத்தில், நாட்டின் நிலக்­க­டலை உற்­பத்தி, 31 லட்சம் டன்­னாக இருந்­தது.
உற்பத்தி:நாடு முழு­வதும் குறித்த காலத்தில் மழை பொழிந்­ததும், வழக்­கத்தை விட, 6 சத­வீதம் கூடு­த­லாக மழை பொழிவு இருந்­த­தாலும், உணவு தானி­யங்­களின் உற்­பத்­தியில், இந்­தியா சாதனை படைக்கும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.இது குறித்து இந்­திய எண்ணெய் உற்­பத்­தி­யா­ளர்கள் கூட்­ட­மைப்பு வெளி­யிட்­டுள்ள அறிக்கை:
நடப்­பாண்டு கரீப் பரு­வத்தில், குஜ­ராத்தில் நிலக்­க­டலை பயி­ரிடும் பரப்­ப­ளவு, 36 சத­வீதம் அதி­க­ரித்து, 16.60 லட்சம் ஹெக்டே­ராக உயர்ந்­துள்­ளது.இது, சென்ற ஆண்டு, இதே காலத்தில், 12.24 லட்சம் ஹெக்டே­ராக இருந்­தது.நடப்­பாண்டு, ஒரு ஹெக்டே­ரில்,நிலக்­க­டலை உற்­பத்தி, சரா­ச­ரி­யாக, 1,560 கிலோ என்ற அளவில், இரு மடங்கு அதி­க­ரிக்கும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இது, கடந்த ஆண்டு, 760 கிலோ­வாக இருந்­தது.
ஜூன் மாத துவக்­கத்தில் நடப்­பட்ட நிலக்­க­டலை பயிர், தற்­போது நன்கு வளர்ச்சி கண்டு, முதிர்ச்சி அடைந்­துள்­ளது. அறு­வ­டைக்கு வறண்ட வானிலை தேவைப்­ப­டு­கி­றது.ஆனால், தற்­போது ஒரு சில பகு­தி­களில் மழை பெய்து வரு­கி­றது. இந்த மழை தொடர்ந்து நீடித்தால், நன்கு விளைந்­துள்ள நிலக்­க­டலை பயிர் பாதிக்­கப்­படும். இதனால், நிலக்­க­டலை உற்­பத்தி, 5–7 சத­வீதம் குறை­யவும் வாய்ப்­புள்­ளது.
வறட்சி நிலை:கடந்த ஆண்டு, குஜ­ராத்தின் சவு­ராஷ்­டிரா பகு­தி­களில், கடு­மை­யான வறட்சி காணப்­பட்­டது. இதனால், குஜ­ராத்தின் நிலக்­க­டலை உற்­பத்தி, 6.95 லட்சம் டன்­னாக சரி­வ­டைந்­தது. ஆனால், நடப்பு ஆண்டு கரீப் பரு­வத்தில், குஜ­ராத்தில் நிலக்­க­டலை உற்­பத்தி, சாதனை அள­வாக, 25.95 லட்சம் டன்­னாக உயரும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.இதற்கு, நிலக்­க­டலை பயி­ரிடும் பரப்­ப­ளவு அதி­க­ரித்­துள்­ளதும் கார­ண­மாகும்.
சோயா புண்­ணாக்கு:சென்ற செப்­டம்­ப­ருடன் முடி­வ­டைந்த, 2012–13ம் எண்ணெய் பரு­வத்தில், நாட்டின் சோயா புண்­ணாக்கு ஏற்­று­மதி, ரூபாய் மதிப்பின் அடிப்­ப­டையில், 36 சத­வீதம் உயர்ந்­துள்­ளது.அதே சமயம், சோயா புண்­ணாக்கு ஏற்­று­மதி, அளவின் அடிப்­ப­டையில், 4 சத­வீதம் குறைந்து, 34.73 லட்சம் டன்­னாக சரி­வ­டைந்­துள்­ளது. இது, 2011–12ம் எண்ணெய் பரு­வத்தில், 36.23 லட்சம் டன்­னாக இருந்­தது.
அர­வைக்கு போது­மான அள­விற்கு எண்ணெய் வித்­துக்கள் கிடைக்­கா­ததால், மதிப்­பீட்டு காலத்தில், சோயா புண்­ணாக்கு ஏற்­று­மதி குறைந்­துள்­ளது.சென்ற எண்ணெய் பரு­வத்தில், ஈரான், ஜப்பான், பிரான்ஸ், தாய்­லாந்து, வியட்னாம், இந்­தோ­னே­ஷியா, கொரியா ஆகிய நாடு­க­ளுக்கு, அதிக அளவில் சோயா புண்­ணாக்கு ஏற்­று­மதி செய்­யப்­பட்­டது.சென்ற செப்­டம்பர் மாதத்தில் மட்டும், 1.73 லட்சம் டன் சோயா புண்­ணாக்கு ஏற்­று­மதி செய்­யப்­பட்­டது. இது, கடந்த ஆண்டின், இதே காலத்தில், 2,864 டன் என்ற அள­விற்கு மிக குறை­வாக இருந்­தது.
ஏற்றுமதி:நடப்பு நிதி­யாண்டில், சென்ற ஏப்ரல் முதல் செப்­டம்பர் வரை­யி­லான அரை­யாண்டில், சோயா புண்­ணாக்கு ஏற்­று­மதி, 4.68 சத­வீதம் உயர்ந்து, 8.76 லட்சம் டன்­னாக அதி­க­ரித்­துள்­ளது. இது, சென்ற நிதி­யாண்டின் இதே காலத்தில், 8.37 லட்சம் டன்­னாக இருந்­தது.சென்ற, எண்ணெய் பரு­வத்தில், சோயா ஏற்­று­மதி, 7,745 கோடி ரூபாயில் இருந்து, 10,558 கோடி ரூபா­யாக உயர்ந்­தி­ருக்கும் என, மதிப்­பி­டப்­பட்­டு உள்­ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)