இணைத்தல், கைய­கப்­ப­டுத்தல்மதிப்பு 1,700 கோடி டாலராக சரிவுஇணைத்தல், கைய­கப்­ப­டுத்தல்மதிப்பு 1,700 கோடி டாலராக சரிவு ... இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.61.94 இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.61.94 ...
இயற்கை ரப்பர் இறக்­கு­மதி 1.79 லட்சம் டன்­னாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 அக்
2013
00:47

புது­டில்லி:நடப்பு, 2013–14ம் நிதி­யாண்டில், ஏப்ரல் முதல் செப்­டம்பர் வரை­யி­லான, ஆறு மாத காலத்தில், நாட்டின் இயற்கை ரப்பர் இறக்­கு­மதி, 1.79 லட்சம் டன்­னாக அதி­க­ரித்து உள்­ளது.இது, கடந்த நிதி­யாண்டின் இதே காலத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட இறக்­கு­ம­தியை விட, 52.9 சத­வீதம் அதிகம் என, ரப்பர் வாரியம் வெளி­யிட்­டுள்ள புள்­ளி­வி­வ­ரத்தில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.
டயர் நிறுவனங்கள்:சென்ற செப்­டம்பர் மாதத்தில் மட்டும், இயற்கை ரப்பர் இறக்­கு­மதி, 45,581 டன்­னாக அதி­க­ரித்து உள்­ளது. இது, கடந்­தாண்டின் இதே மாதத்தில், 14,779 டன்­னாக இருந்­தது.கடந்த, 2012–13ம் நிதி­யாண்டில், நாட்டின் இயற்கை ரப்பர் இறக்­கு­மதி, 2.17 லட்சம் டன்­னாக இருந்­தது. இது, இதற்கு முந்­தைய நிதி­யாண்டில், 2.14 லட்சம் டன்­னாக குறைந்து காணப்­பட்­டது.
உள்­நாட்டில், ரப்பர் உற்­பத்திகுறைந்­த­தால், இந்­திய டயர் தயா­ரிப்பு நிறு­வ­னங்கள், தேவையை பூர்த்தி செய்து கொள்ள, அதி­க அ­ளவில் இயற்கை ரப்­பரைஇறக்­கு­மதி செய்து வரு­கி­ன்றன. ரப்பர் வடிப்பு காலத்தில், கேரள மாநி­லத்தில், அதிக மழைப் பொழிவால், இதன் உற்­பத்தி குறைந்து போனது. இதன் கார­ண­மா­கவே, இயற்கை ரப்­பரை அதி­க­ளவில் இறக்­கு­மதி செய்ய வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது என, மோட்டார் வாகன டயர் தயா­ரிப்பு நிறு­வ­னங்கள் கூட்­ட­மைப்பின் தலைமை இயக்­குனர் ராஜீவ் புத்­த­ராஜா தெரி­வித்தார்.நடப்பு நிதி­யாண்டின் முதல் ஆறு மாத காலத்தில், இயற்கை ரப்பர் உற்­பத்தி, முந்­தைய நிதி­யாண்டின் இதே காலத்தை விட, 13.3 சத­வீதம் குறைந்து, 3.43 லட்சம் டன்­னாக சரி­வு­அடைந்துள்­ளது.
மலேசியா:சென்ற செப்­டம்பர் மாதத்­திலும், இதன் உற்­பத்தி, கடந்­தாண்டின் இதே மாதத்­தை­விட, 4.9 சத­வீதம் குறைந்து, 78 ஆயிரம் டன்­னாக இருந்­தது.உல­க­ளவில், இயற்கை ரப்பர் உற்­பத்­தியில், இந்­தியா, 4வது இடத்தில் உள்­ளது. இருப்­பினும், உள்­நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் அள­விற்கு, ரப்பர் உற்­பத்தி இல்­லா­ததால், நம் நாடு, மலே­சியா, தாய்­லாந்து மற்றும் இந்­தோ­னே­சியா ஆகிய நாடு­க­ளி­லி­ருந்து, இதை இறக்­கு­மதி செய்து கொள்­கி­றது.
நாட்டின் ஒட்டு மொத்த இயற்கை ரப்­ப­ருக்­கான தேவையில், டயர் தயா­ரிப்பு நிறு­வ­னங்­களின் பங்­க­ளிப்பு, 60 சத­வீத அள­விற்கு உள்­ளது.நடப்பு நிதி­யாண்டில், இது­வ­ரை­யி­லு­மாக, டால­ருக்கு எதி­ரான ரூபாய் மதிப்பு, 14 சத­வீதம் சரி­வ­டைந்துள்­ளது. இந்­நி­லை­யிலும், உள்­நாட்டை விட, அயல்­நா­டு­களில், இதன் விலை குறை­வாக உள்­ளது. இதற்கு எடுத்­து­காட்­டாக, பாங்காக் சந்­தையில், ஒரு குவிண்டால் ஆர்.எஸ்.எஸ்–3 வகை இயற்கை ரப்­பரின் விலை, 15,347 ரூபா­யாக உள்­ளது.
இது, இதற்கு இணை­யான, இந்­திய ரப்பர் விலையை விட, 8.5 சத­வீதம் குறை­வாகும்.ஆனால், இறக்­கு­ம­தி­யாகும், ஒரு கிலோ ரப்­ப­ருக்கு, 20 ரூபாய் சுங்க வரி விதிக்­கப்­ப­டு­கி­றது. இதனால், இறக்­கு­ம­தி­யாகும் ரப்­பரின் விலை, அதி­க­மாக உள்­ளது. என்­றாலும், தேவையை பூர்த்தி செய்யும் அள­விற்கு உள்­நாட்டில், இயற்கை ரப்பர் இல்­லா­ததால்,இதை இறக்­கு­மதி செய்ய வேண்­டி­யுள்­ளது என, ராஜீவ் புத்­த­ராஜா குறிப்­பிட்டார்.
இறக்குமதி வரி:உள்­நாட்டு விவ­சா­யி­களும், வர்த்­த­கர்­களும், ஒரு கிலோ இயற்கை ரப்பர் மீதான இறக்­கு­மதி வரியை, தற்­போ­தைய, 20 ரூபா­யி­லி­ருந்து, 34 ரூபா­யாக அதி­க­ரிக்­கும்­படி, மத்­திய அர­சுக்கு கோரிக்கை விடுத்­தனர்.ஆனால், இயற்கை ரப்பர் மீதான வரியை உயர்த்­தினால், அது, உள்­நாட்டு டயர் தயா­ரிப்பு நிறு­வ­னங்­களை பாதிக்கும் என்­பதால், மத்­திய அரசு, இக்­கோ­ரிக்­கையை நிரா­க­ரித்­தது.
நடப்பு நிதி­யாண்டில், இந்­தி­யாவின் இயற்கை ரப்பர் இறக்­கு­மதி, 2.50 லட்சம் டன்­னாக அதி­க­ரிக்க வாய்ப்­புள்­ளது என, இத்­து­றையைச் சேர்ந்­த­வர்கள் தெரி­வித்­தனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)