பதிவு செய்த நாள்
10 அக்2013
01:19
மும்பை:நடப்பு, 2013 14ம் நிதியாண்டின் இறுதியில், இந்திய வங்கிகளின் நிகர வசூலாகாத கடன், சராசரியாக, 4.4 சதவீதமாக அதிகரிக்கும் என, கிரிசில் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இது, கடந்த, 2012 13ம் நிதியாண்டில் இருந்ததை (3.3 சதவீதம்) விட, 1.10 சதவீதம் அதிகமாகும்.இந்திய நிறுவனங்களின் செயல்பாடு பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதையடுத்து, பல நிறுவனங்கள் வங்கிகளிடமிருந்து பெற்ற கடனை, திரும்பச் செலுத்த முடியாத நிலையில் உள்ளன
வட்டி செலவினம் :அதிகமாக உள்ள நிலையில், நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு, தேவை குறைந்து உள்ளது.இதனால், நிறுவனங்கள் வங்கிகளிடமிருந்து பெற்ற கடனை, உரிய காலத்தில் திரும்பச்செலுத்த முடியாத நிலையில் உள்ளன.
நடப்பு நிதியாண்டின் இறுதியில், இந்திய வங்கிகளின் மொத்த வசூலாகாத கடன், 5.7 சதவீதமாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இறுதியில் இருந்ததை (4.3 சதவீதம்) விட, 1.4 சதவீதம் அதிகமாக இருக்கும் என, கிரிசில் நிறுவனம் மேலும் தெரிவித்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|