வால்மார்ட்  பார்தி உறவு முறிந்தது: தனித்து இயங்க முடிவுவால்மார்ட் பார்தி உறவு முறிந்தது: தனித்து இயங்க முடிவு ... ரூபாயின் மதிப்பில் ஏற்றம் - ரூ.61.35 ரூபாயின் மதிப்பில் ஏற்றம் - ரூ.61.35 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
நாட்டின் மொத்த நேரடி வரி வசூல்ரூ.3 லட்சம் கோடியாக அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 அக்
2013
01:36

புதுடில்லி:நடப்பு 201314ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில், நாட்டின் மொத்த நேரடி வரி வசூல், 10.66 சதவீதம் வளர்ச்சி கண்டு, 3.01 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என, நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி:இது, சென்ற நிதிஆண்டின் இதே காலத்தில்,2.72 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.நேரடி வரி வசூலின் கீழ், தனிநபர் வருமான வரி, நிறுவனங்கள் செலுத்தும் வரி, செல்வ வரி, பங்கு பரிவர்த்தனை வரி உள்ளிட்டவை அடங்கும்.

மதிப்பீட்டு காலத்தில், நிறுவனங்கள் செலுத்திய மொத்த வரி வசூல், 7.93 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,78,173 கோடி ரூபாயிலிருந்து, 1,92,308 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டு உள்ளது.

இதே போன்று, தனிநபர் வருமான வரி வசூல், ஒட்டு மொத்த அளவில், 16.15 சதவீதம் அதிகரித்து, 91,463 கோடியிலிருந்து, 1,06,231 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மேலும், செல்வ வரி வசூலும், 5.27 சதவீதம் வளர்ச்சி கண்டு, 474 கோடியிலிருந்து, 499 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. பங்கு பரிவர்த்தனை வரி, 2,210 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது.

கணக்கீட்டு காலத்தில், நிகர அளவிலான நேரடி வரி வசூல், 10.72 சதவீதம் அதிகரித்து, 2,26,653 கோடியிலிருந்து, 2,50,953 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது. இலக்குநடப்பு நிதியாண்டில், மத்திய அரசு, நேரடி வரி வசூல் வாயிலாக, 6.68 லட்சம் கோடி ரூபாயை திரட்ட இலக்கு நிர்ணயித்து உள்ளது.

இது, கடந்த நிதியாண்டில் திரட்டப்பட்ட தொகையை (5.65 லட்சம் கோடி ரூபாய்) விட, 19 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)