ஓட்டல் நீச்சல் குளத்தில் சப்ளை செய்யப்படும் உணவு, குளிர்பானத்திற்கு சேவை வரிஓட்டல் நீச்சல் குளத்தில் சப்ளை செய்யப்படும் உணவு, குளிர்பானத்திற்கு ... ... இ.பி.எப்., வட்டி 8.5 சதவீதத்தை தாண்டும்? : தீபாவளிக்கு முன் அறிவிக்க திட்டம் இ.பி.எப்., வட்டி 8.5 சதவீதத்தை தாண்டும்? : தீபாவளிக்கு முன் அறிவிக்க திட்டம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வங்கி துறை பங்குகளில் பரஸ்பர நிதி : நிறுவனங்களின் முதலீடு குறைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 அக்
2013
12:48

புதுடில்லி: சென்ற ஆகஸ்ட் மாதம் வரையிலான காலத்தில், பரஸ்பர நிதி நிறுவனங்கள், வங்கி துறை பங்குகளில் மேற்கொண்ட முதலீடு, 22,744 கோடி ரூபாய் என்ற அளவில் குறைந்துள்ளது.
இது, கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்ச அளவாகும் என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, "செபி' தெரிவித்துள்ளது. மதிப்பீட்டு காலத்தில், ஒட்டு மொத்த அளவில், பரஸ்பர நிதி நிறுவனங்கள், பங்குகளில் மேற்கொண்ட முதலீடு, 1.45 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதில், வங்கி துறையின் பங்களிப்பு, 15.7 சதவீதமாகும். பரஸ்பர நிதி நிறுவனங்கள், வங்கி துறை பங்குகளில், மேற்கொண்ட முதலீடு கடந்த, 2012ம் ஆண்டு ஆகஸ்டில் தான், 22,586 கோடி ரூபாய் என்ற அளவில், மிகவும் குறைந்து காணப்பட்டது. எனினும், இது, கடந்தாண்டு டிசம்பரில், 43,659 கோடி ரூபாய் என்ற அளவில் உயர்ந்து காணப்பட்டது. இந்நிலையில், நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் தான், பரஸ்பர நிதி நிறுவனங்கள், வங்கி துறை பங்குகளில் மேற்கொண்ட முதலீடு, 22,744 கோடி ரூபாய் என்ற அளவில் மிகவும் சரிவடைந்துள்ளது. வங்கி துறையை அடுத்து, பரஸ்பர நிதி நிறுவனங்கள், மென்பொருள் நிறுவனப் பங்குகளில் மேற்கொண்ட முதலீடு, 20,284 கோடி ரூபாயாகவும், மருந்து துறை நிறுவனப் பங்குகளில் மேற்கொண்ட முதலீடு, 12,444 கோடி ரூபாயாகவும் உள்ளது. மேலும், நுகர்வோர் சாதனங்கள் அல்லாத இதர துறை நிறுவனப் பங்குகளில், 10,771 கோடி ரூபாயையும், பெட்ரோலிய துறை நிறுவனப் பங்குகளில், 8,958 கோடி ரூபாயையும், பரஸ்பர நிதி நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)