பதிவு செய்த நாள்
11 அக்2013
18:42
ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம், கடந்த வாரம் தன் புதிய வெளியீடாக, புதிய ஆக்டாவியா என்ற அழகிய காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் டில்லி பிக்ஸ்ஷோரும் விலை, 13.95 லட்சம், சென்னையின் எக்ஸ்ஷோரும் விலை 14.20 லட்சம் ரூபாய் (மாடல் 1.4.TS-MT) என்று துவங்குகிறது. ஏழு வகையானதில், 3 பெட்ரோல் மற்றும் நான்கு டீசல் பிரிவுகளில் வரும், ஆக்டோவியாவின் அதிகபட்ச விலை 20 லட்சம். அதுபோல் ஏழு வண்ணங்களில், மேனுவல் மற்றும் ஆட்டோ கியர் பிரிவுகளாக கிடைக்கிறது. இதன் பாதுகாப்பு அம்சங்களை, ABS WTH EBD பிரேக் அனில்டெண்ட், டிராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் இரண்டு ஏர் பேக் உள்ளன. ஸ்கோடா என்றால், அழகுக்கு உத்தரவாதம் தருவது. அந்த வகையில், புதிய ஆக்டோவியா, அழகான கம்பீர தோற்றத்துடன் கூடுதல் இடவசதி சிறந்த எரிபொருள் சிக்கனம் போன்றவையோடு, சிறப்பான உள் அலங்கார வசதியுடன், புதிய தலைமுறைக்கு ஏற்ற, நவீன செயின் வசீகரமாக விளங்குகிறது. இந்திய மக்களின், மனதில் அழகான வடிவமைப்பு கார் என்றால், தனியிடம் பிடித்துள்ள ஸ்கோடாவின் புதிய வரவான, ஆக்டோவியா கார் சந்தையில் புதிய இடத்தை பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|