பதிவு செய்த நாள்
14 அக்2013
00:32
புதுடில்லி:நடப்பாண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான எட்டு மாத காலத்தில், இந்திய நிறுவனங்கள், தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு, பங்கு ஒதுக்கீடு செய்ததன் வாயிலாக, 12,354 கோடி ரூபாயை திரட்டிக் கொண்டுள்ளன. 20 பங்கு வெளியீடுகள் மூலம் இத்தொகை திரட்டப்பட்டுள்ளது என, ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
கடந்த 2012ம் ஆண்டின் இதே எட்டு மாத காலத்தில், இந்திய நிறுவனங்கள், தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு பங்குகளை ஒதுக்கியதன் மூலம், 8,969 கோடி ரூபாயை திரட்டி கொண்டன. மொத்தம், 47 பங்கு வெளியீடுகள் வாயிலாக, இத்தொகை திரட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.மதிப்பீட்டு காலத்தில், ஆக்சிஸ் வங்கி, இவ்வகை வெளியீடு மூலம், 5,537 கோடி ரூபாயை திரட்டி கொண்டது.உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலவரங்களால், பங்கு சந்தை அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் முதல், நிறுவனங்கள், தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு பங்கு ஒதுக்கீடு செய்து நிதி திரட்டுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|