பதிவு செய்த நாள்
16 அக்2013
01:34
சிங்கப்பூர் : சிங்கப்பூருக்கு அதிகளவில் அரிசி ஏற்றுமதி செய்ததில், தாய்லாந்தை பின்னுக்கு தள்ளி, முதன் முறையாக, இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது.
நடப்பு 2013ம் ஆண்டில், முதல் எட்டு மாதங்களில் (ஜன., - ஆக.,), சிங்கப்பூருக்கான, இந்தியாவின் அரிசி ஏற்றுமதி, 32.9 சதவீதம் வளர்ச்சி கண்டு, 92,865 டன்னாக அதிகரித்துள்ளது.இதே காலத்தில், தாய்லாந்தின் அரிசி ஏற்றுமதி, 30.4 சதவீதம் மட்டுமே உயர்ந்து, 85,816 டன்னாக உள்ளது. ஆக, மதிப்பீட்டு காலத்தில், சிங்கப்பூருக்கான அரிசி ஏற்றுமதியில், 2.5 சதவீத வித்தியாசத்தில், தாய்லாந்து நாட்டை பின்னுக்கு தள்ளி, இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது.
கடந்த, 2009ம் ஆண்டில், 15.3 சதவீதம் என்ற அளவில் இருந்த, சிங்கப்பூருக்கான இந்தியாவின் அரிசி ஏற்றுமதி, தற்போது, 29.5 சதவீதம் அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது. கணக்கீட்டு காலத்தில், சிங்கப்பூருக்கான, வியட்னாம் நாட்டின் ஏற்றுமதி, 27.4 சதவீதம் உயர்ந்து, 77,459 டன்னாக அதிகரித்துள்ளது.இவை தவிர, மியான்மர் (2.5 சதவீதம்). பாகிஸ்தான் (2.5 சதவீதம்), அமெரிக்கா (2.2 சதவீதம்) கம்போடியா (0.9 சதவீதம்). ஆஸ்திரேலியா (0.6 சதவீதம்) ஆகிய நாடுகளும், சிங்கப்பூருக்கான அரிசி ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|