பதிவு செய்த நாள்
16 அக்2013
02:01
ஹாங்காங் : அடுத்த 20 ஆண்டுகளில், சர்வதேச விமான சேவையில், பயணிகளை விட, சரக்கு போக்குவரத்து பிரிவு சிறப்பான அளவில் வளர்ச்சி காணும் என, ஏர்பஸ் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதில் இடம்பெற்றுள்ள கூடுதல் விவரம்: வரும் 2032ம் ஆண்டு, சர்வதேச விமான போக்குவரத்து சேவை, ஒட்டு மொத்த அளவில், ஆண்டுக்கு, 4.8 சதவீதம் வளர்ச்சி காணும். இது, சர்வதேச பயணிகள் போக்குவரத்து சேவையின், 4.7 சதவீத வளர்ச்சியை விட சற்று அதிகம்.தற்போது, உலகளவில், சரக்கு போக்குவரத்து சேவையில், 1,645 விமானங்கள் இயக்கப் படுகின்றன. இது, வரும், 2032ம் ஆண்டில், 2,905 ஆக அதிகரிக்கும். இடைப்பட்ட, 20 ஆண்டு காலத்தில், 871 புதிய சரக்கு போக்குவரத்து விமானங்கள் தேவைப்படும்.பொருளாதார மந்தநிலை சர்வதேச பொருளாதார மந்தநிலையால், கடந்த, 2011ம் ஆண்டு முதல், சரக்கு விமான துறை கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.
பல விமான சேவை நிறுவனங்கள், அவற்றின் சரக்கு விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. மேலும், புதிய விமானங்களுக்கு 'ஆர்டர்' வழங்குவதையும் தள்ளி வைத்துள்ளன.
குறிப்பாக ஆசிய விமான சேவை நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றின் ஒட்டுமொத்த விமானச் சேவை வருவாயில், சரக்கு விமான போக்குவரத்தின் பங்களிப்பு, 30 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.நடப்பு 2013ம் ஆண்டின், ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான எட்டு மாதங்களில், சரக்கு விமான போக்குவரத்து பிரிவின் வருவாய், கடந்த ஆண்டின் இதே காலத்தை விட, 0.7 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டு உள்ளது.ஏர்பஸ் நிறுவனம்எனினும், சென்ற ஆகஸ்ட் மாதம், சரக்கு விமான போக்குவரத்து வாயிலான வருவாய், 3.6 சதவீதம் உயர்ந்துள்ளது என, சர்தேச விமான போக்குவரத்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சர்வதேச சரக்கு போக்குவரத்து சேவையில், ஏர்பஸ், 20 சதவீத பங்களிப்பையும், போயிங் நிறுவனம், எஞ்சிய பங்களிப்பையும் கொண்டுள்ளன.ஆசிய நாடுகளுக்கு இடையே, சரக்கு விமான போக்குவரத்து துறையின் வளர்ச்சியை சமாளிக்க, நடுத்தரமான சரக்கு விமானங்களுக்கான தேவை அதிகரிக்கும்.ஏர்பஸ் நிறுவனம், ஏ330 என்ற நடுத்தர சரக்கு போக்குவரத்து விமானங்களை தயாரித்து வருகிறது. போயிங் நிறுவனம், 100 டன்னிற்கும் மேற்பட்ட சரக்கு விமானங்களை தயாரிப்பதில் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. இந்நிறுவனம், போயிங் 747 மற்றும் 777 என்ற சரக்கு விமானங்களை தயாரிக்கிறது.வடிவமைப்புஅடுத்த, 20 ஆண்டுகளில் தேவைப்படும், 871 சரக்கு விமானங்களில், கிட்டத்தட்ட, 50 சதவீதம், நடுத்தர விமானங்களாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் சூப்பர் ஜம்போ ஏ380 பயணிகள் விமானத்தை போன்று, சரக்கு விமானத்தை வடிவமைக்க வேண்டும் என, சில விமானச் சேவை நிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளன. ஆனால், அது போன்ற திட்டம் எதுவும் தற்போது இல்லை என, ஏர்பஸ் மறுத்துஉள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|