பதிவு செய்த நாள்
16 அக்2013
02:10
புதுடில்லி : ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனத்தின் உருக்கு உற்பத்தி, நடப்பு நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், 5.67 சதவீதம் வளர்ச்சி கண்டு, 29.80 லட்சம் டன்னாக அதிகரித்து உள்ளது. இது, கடந்தாண்டின் இதே காலாண்டில், 28.20 லட்சம் டன்னாக இருந்தது.
மதிப்பீட்டு காலாண்டில், மோட்டார் வாகனத் துறைக்கான உருக்கு தகடுகளின் உற்பத்தி, 18 சதவீதம் அதிகரித்து, 24.50 லட்சம் டன்னாக உயர்ந்து உள்ளது. மேலும், கட்டுமானத் துறைக்கு தேவையான, உருக்கு கம்பிகளின் உற்பத்தி, 3 சதவீதம் வளர்ச்சி கண்டு, 4.60 லட்சம் டன்னாகவும் அதிகரித்து உள்ளது.
நடப்பு நிதியாண்டின், முதல் ஆறு மாத காலத்தில், இந்நிறுவனத்தின் உருக்கு உற்பத்தி, கடந்தாண்டின் இதே காலத்தை விட, 3 சதவீதம் உயர்ந்து, 58.40 லட்சம் டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது. இதற்கிடையே, டாட்டா ஸ்டீல் நிறுவனத்தின் உருக்கு உற்பத்தியும், நடப்பு நிதியாண்டின், முதல் ஆறு மாத காலத்தில் (ஏப்., - செப்.,), 28.10 லட்சம் டன்னாக உயர்ந்து உள்ளது. இது, கடந்த நிதியாண்டின், இரண்டாவது அரையாண்டில் (அக்.,- மார்ச்), 27.20 லட்சம் டன்னாக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|