ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனத்தின் உருக்கு உற்பத்தி 29.80 லட்சம் டன்ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனத்தின் உருக்கு உற்பத்தி 29.80 லட்சம் டன் ... பங்கு வர்த்தகத்தில் சுணக்க நிலை பங்கு வர்த்தகத்தில் சுணக்க நிலை ...
எரிசக்தி துறைக்கு 2.30 லட்சம் கோடி டாலர் முதலீடு தேவை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2013
02:27

சிங்கப்பூர் : இந்திய எரிசக்தி துறைக்கு வரும், 2035ம் ஆண்டிற்குள், 2.30 லட்சம் கோடி டாலர் தேவைப்படும் என, ஏஷியன் டெவலப்மெண்ட் பேங்க் மதிப்பிட்டுள்ளது.
இது குறித்து இவ்வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை: ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தில், 2010 - 2035ம் ஆண்டுகளில், எரிசக்தி துறையின் மொத்த முதலீட்டில், தெற்காசியாவின் பங்களிப்பு, 20.6 சதவீதம் (2.40 லட்சம் கோடி டாலர்) என்ற அளவிற்கு இருக்கும்.பங்களிப்பு இந்தியாவில், எரிசக்தி விலை தான் முக்கிய பிரச்னையாக உள்ளது. மதிப்பீட்டு காலத்தில், தெற்காசிய எரிசக்தி துறைக்கு தேவைப்படும் முதலீட்டில், இந்தியாவின் பங்களிப்பு, 95.6 சதவீதம் (2.30 லட்சம் கோடி டாலர்) இருக்கும்.
தெற்காசியாவில், இந்தியா, வங்க தேசம், பூடான், வங்கதேசம், மாலத் தீவு, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகள் அடங்கும். மதிப்பீட்டு காலத்தில், இந்தியாவின் எரிசக்தி தேவை, ஆண்டுக்கு, 2.7 சதவீதம் என்ற அளவிற்கு வளர்ச்சி காணும்.
எனினும், இந்த வளர்ச்சி, இதே காலத்தில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியுடன் (5.7 சதவீதம்) ஒப்பிடும் போது குறைவாகும்.வரும், 2,035ம் ஆண்டு வரை, மின் துறையின் முக்கிய எரிபொருளாக நிலக்கரி விளங்கும்.
இதே காலத்தில், தெற்காசியாவின் எரிசக்தி தேவையில், இந்தியாவின் பங்களிப்பு, 92.5 சதவீதம் என்ற அளவில் தொடர்ந்து இருக்கும். உள்நாட்டில் எரிசக்தி உற்பத்தியை விட, அதற்கான தேவை அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக, இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய், எரிவாயு, நிலக்கரி ஆகியவை, நாட்டின் பொருளாதாரத்தில்,
தாக்கத்தை ஏற்படுத்தும்.எரிசக்தி பாதுகாப்புக்கு, இந்தியா, கொள்கை அளவில் முன்னுரிமை அளிக்கும் நிலை ஏற்படும்.
மானியம் அரசு மானியம் காரணமாக, மண்ணெண்ணெய், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கு மிகவும் குறைவான தொகை வசூலிக்கப் படுகிறது. அதுமட்டுமின்றி, மின்கட்டணமும் மிகக் குறைவாகவே உள்ளது. குறிப்பிட்ட மாநிலங்களில், விவசாய பணிகளுக்கு பயன்படும் மின்சாரத்திற்கு, மானியம் வழங்கப்படுகிறது. மின் கட்டண நிர்ணயமும், அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால், தனியார் நிறுவனங்கள், புதிய மின் உற்பத்தி திட்டங்களில் முதலீடு செய்ய அதிகம் ஆர்வம் காட்டாமல் உள்ளன. இதுவும் மின் உற்பத்தி வளர்ச்சிக்கு அணை போடுவதாக உள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)