எரிசக்தி துறைக்கு 2.30 லட்சம் கோடி டாலர் முதலீடு தேவைஎரிசக்தி துறைக்கு 2.30 லட்சம் கோடி டாலர் முதலீடு தேவை ... நாட்டின் தாவர எண்ணெய் இறக்குமதி 8.64 லட்சம் டன் நாட்டின் தாவர எண்ணெய் இறக்குமதி 8.64 லட்சம் டன் ...
பங்கு வர்த்தகத்தில் சுணக்க நிலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2013
02:28

மும்பை : நாட்டின் பங்கு வர்த்கம், நேற்று, மந்தமாக இருந்தது. முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி, அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததால், 'சென்செக்ஸ்' 0.29 சதவீத சரிவுடனும், 'நிப்டி', 0.39 சதவீத சரிவுடனும் முடிவு அடைந்தன. ஐரோப்பா மற்றும இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்கம் நன்கு இருந்தது. இருப்பினும், இது, இந்திய பங்குச் சந்தைகளில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. நேற்றைய வியாபாரத்தில், வங்கி, ரியல் எஸ்டேட், நுகர்வோர் சாதனங்கள் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. இருப்பினும், உலோகம், தகவல் தொழில்நுட்ப துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு மட்டும் ஓரளவிற்கு தேவை காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 59.92 புள்ளிகள் சரிவடைந்து, 20,547.62 புள்ளிகளில் நிலைபெற்றது.
வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 20,759.58 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 20,446.73 புள்ளிகள் வரையிலும் சென்றது.
'சென்செகஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ஹீரோ மோட்டோகார்ப், எச்.டீ.எப்.சி. பேங்க், டாட்டா பவர் உள்ளிட்ட, 17 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், டாட்டா ஸ்டீல், பார்தி ஏர்டெல், விப்ரோ உள்ளிட்ட, 13 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி', 23.65 புள்ளிகள் குறைந்து, 6,089.05 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 6,156.30 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 6,056.55 புள்ளிகள் வரையிலும் சென்றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)