பதிவு செய்த நாள்
16 அக்2013
02:28
மும்பை : நாட்டின் பங்கு வர்த்கம், நேற்று, மந்தமாக இருந்தது. முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி, அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததால், 'சென்செக்ஸ்' 0.29 சதவீத சரிவுடனும், 'நிப்டி', 0.39 சதவீத சரிவுடனும் முடிவு அடைந்தன. ஐரோப்பா மற்றும இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்கம் நன்கு இருந்தது. இருப்பினும், இது, இந்திய பங்குச் சந்தைகளில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. நேற்றைய வியாபாரத்தில், வங்கி, ரியல் எஸ்டேட், நுகர்வோர் சாதனங்கள் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. இருப்பினும், உலோகம், தகவல் தொழில்நுட்ப துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு மட்டும் ஓரளவிற்கு தேவை காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 59.92 புள்ளிகள் சரிவடைந்து, 20,547.62 புள்ளிகளில் நிலைபெற்றது.
வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 20,759.58 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 20,446.73 புள்ளிகள் வரையிலும் சென்றது.
'சென்செகஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ஹீரோ மோட்டோகார்ப், எச்.டீ.எப்.சி. பேங்க், டாட்டா பவர் உள்ளிட்ட, 17 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், டாட்டா ஸ்டீல், பார்தி ஏர்டெல், விப்ரோ உள்ளிட்ட, 13 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி', 23.65 புள்ளிகள் குறைந்து, 6,089.05 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 6,156.30 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 6,056.55 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|