பதிவு செய்த நாள்
16 அக்2013
02:30
புதுடில்லி : நடப்பாண்டு செப்டம்பர் மாதத்தில், நாட்டின் தாவர எண்ணெய் இறக்குமதி, 13 சதவீதம் சரிவடைந்து, 8.64 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. இது, கடந்தாண்டு இதே மாதத்தில், 9.94 லட்சம் டன்னாக இருந்தது என, எண்ணெய் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (எஸ்.இ.ஏ.,) தெரிவித்து உள்ளது.
உற்பத்தி டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் உள்நாட்டில், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது போன்றவற்றால், மதிப்பீட்டு மாதத்தில், தாவர எண்ணெய் இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவிற்கு சரிவடைந்துள்ளது என, எஸ்.இ.ஏ.,- வின் நிர்வாக இயக்குனர் பீ.வி.மேத்தா தெரிவித்தார்.
கணக்கீட்டு மாதத்தில், ஒட்டு மொத்த தாவர எண்ணெய் இறக்குமதியில், சமையல் எண்ணெய் பங்களிப்பு, 8.34 லட்சம் டன்னாகவும், சமையல் சாராத இதர எண்ணெய் பங்களிப்பு, 30,062 டன்னாகவும் உள்ளது. மொத்த சமையல் எண்ணெய் இறக்குமதியில், பமாயிலின் பங்களிப்பு, 6.44 லட்சம் டன்னாகவும், சோயா எண்ணெய் பங்களிப்பு, 1.41 லட்சம் டன்னாகவும், சூரியகாந்தி எண்ணெய் பங்களிப்பு , 48,498 டன்னாகவும் உள்ளன.
பல்வேறு துறைமுகங்கள் மற்றும் குழாய் வழி பாதைகளில் உள்ள சமையல் எண்ணெய் கைஇருப்பு, முறையே, 5.15 லட்சம் டன் மற்றும் 9.50 லட்சம் டன் என்ற அளவில் உள்ளது என, எஸ்.இ.ஏ., மதிப்பீடு செய்துள்ளது.
நடப்பு 2012-13ம் பருவத்தின், நவம்பர் முதல் செப்டம்பர் வரையிலான, 11 மாத காலத்தில், நாட்டின் ஒட்டு மொத்த தாவர எண்ணெய் இறக்குமதி, 5.46 சதவீதம் அதிகரித்து, 96.56 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. தேவைஇது, கடந்த பருவத்தின் இதே காலத்தில், 91.56 லட்சம் டன்னாக இருந்தது.
நாட்டின் ஒட்டு மொத்த சமையல் எண்ணெய் தேவையில், பாதிக்கும் அதிகமாக, இறக்குமதி வயிலாகவே பூர்த்தி செய்து கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|