பங்கு வர்த்தகத்தில் சுணக்க நிலைபங்கு வர்த்தகத்தில் சுணக்க நிலை ... பரஸ்பர நிதி நிறுவனங்களின் லாபம் அதிகரிப்பு :நிர்வகிக்கும் சொத்து மதிப்பும் உயர்ந்தது பரஸ்பர நிதி நிறுவனங்களின் லாபம் அதிகரிப்பு :நிர்வகிக்கும் சொத்து ... ...
நாட்டின் தாவர எண்ணெய் இறக்குமதி 8.64 லட்சம் டன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2013
02:30

புதுடில்லி : நடப்பாண்டு செப்டம்பர் மாதத்தில், நாட்டின் தாவர எண்ணெய் இறக்குமதி, 13 சதவீதம் சரிவடைந்து, 8.64 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. இது, கடந்தாண்டு இதே மாதத்தில், 9.94 லட்சம் டன்னாக இருந்தது என, எண்ணெய் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (எஸ்.இ.ஏ.,) தெரிவித்து உள்ளது.
உற்பத்தி டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் உள்நாட்டில், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது போன்றவற்றால், மதிப்பீட்டு மாதத்தில், தாவர எண்ணெய் இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவிற்கு சரிவடைந்துள்ளது என, எஸ்.இ.ஏ.,- வின் நிர்வாக இயக்குனர் பீ.வி.மேத்தா தெரிவித்தார்.
கணக்கீட்டு மாதத்தில், ஒட்டு மொத்த தாவர எண்ணெய் இறக்குமதியில், சமையல் எண்ணெய் பங்களிப்பு, 8.34 லட்சம் டன்னாகவும், சமையல் சாராத இதர எண்ணெய் பங்களிப்பு, 30,062 டன்னாகவும் உள்ளது. மொத்த சமையல் எண்ணெய் இறக்குமதியில், பமாயிலின் பங்களிப்பு, 6.44 லட்சம் டன்னாகவும், சோயா எண்ணெய் பங்களிப்பு, 1.41 லட்சம் டன்னாகவும், சூரியகாந்தி எண்ணெய் பங்களிப்பு , 48,498 டன்னாகவும் உள்ளன.
பல்வேறு துறைமுகங்கள் மற்றும் குழாய் வழி பாதைகளில் உள்ள சமையல் எண்ணெய் கைஇருப்பு, முறையே, 5.15 லட்சம் டன் மற்றும் 9.50 லட்சம் டன் என்ற அளவில் உள்ளது என, எஸ்.இ.ஏ., மதிப்பீடு செய்துள்ளது.
நடப்பு 2012-13ம் பருவத்தின், நவம்பர் முதல் செப்டம்பர் வரையிலான, 11 மாத காலத்தில், நாட்டின் ஒட்டு மொத்த தாவர எண்ணெய் இறக்குமதி, 5.46 சதவீதம் அதிகரித்து, 96.56 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. தேவைஇது, கடந்த பருவத்தின் இதே காலத்தில், 91.56 லட்சம் டன்னாக இருந்தது.
நாட்டின் ஒட்டு மொத்த சமையல் எண்ணெய் தேவையில், பாதிக்கும் அதிகமாக, இறக்குமதி வயிலாகவே பூர்த்தி செய்து கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)