தங்கம் விலை ரூ.232 உயர்வுதங்கம் விலை ரூ.232 உயர்வு ... சென்னை ஷாப்பிங் மாலில் நவீன 'டாஸ்மாக்' திறப்பு சென்னை ஷாப்பிங் மாலில் நவீன 'டாஸ்மாக்' திறப்பு ...
டாஸ்மாக்கில் 3 நாளில் ரூ.270 கோடிக்கு சரக்கு விற்பனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2013
14:27

ஆயுத பூஜை உள்ளிட்ட தொடர் விடுமுறைகளால், டாஸ்மாக் கடைகளில், 270 கோடி ரூபாய்க்கு, மது வகைகள் விற்பனையாகி உள்ளன. தமிழகத்தில், 6,800க்கும் மேற்பட்ட, டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில், அரசு நிர்ணயம் செய்துள்ள விலையில், உள்நாட்டில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மது வகைகள் (ஐ.எம்.எப்.,) மற்றும் பீர் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன.

டாஸ்மாக் கடைகளில், நாள்தோறும், சராசரியாக, 67 கோடி ரூபாய் மதிப்பிற்கும், வார இறுதி நாட்களான, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில், 70-75 கோடி ரூபாய் மதிப்பிற்கும், மது வகைகள் விற்பனையாகின்றன. பொதுவாக, ஆங்கில புத்தாண்டு, பொங்கல், ஆயுதபூஜை, தீபாவளி உள்ளிட்ட சிறப்பு விடுமுறை தினங்களில், சரக்கு விற்பனை, சராசரி விற்பனையை விட, கூடுதலாக இருக்கும்.ஆயுத பூஜையை முன்னிட்டு, கடந்த ெவள்ளி கிழமை முதல், டாஸ்மாக் கடைகளில், சரக்கு விற்பனை களைக்கட்ட துவங்கியது.கடந்த வெள்ளிக்கிழமை, 78 கோடி; சனிக்கிழமை, 89 கோடி; ஞாயிற்று கிழமை, 103 கோடி ரூபாய் என, மொத்தம், 270 கோடி ரூபாய்க்கு, மதுவகைகள் விற்பனையாகி உள்ளன.

இதுகுறித்து, டாஸ்மாக் மாவட்ட மலோளர் ஒருவர் கூறியதாவது:வழக்கமான விற்பனையை விட, விடுமுறை தினங்களில் விற்பனை அதிகம் இருக்கும் என்பது எதிர்பார்த்தது தான். இதனால், கடைகளில், கூடுதலாக சரக்குகள் இருப்பு வைக்கப்பட்டன. விற்பனை அதிகரிப்பிற்கு, கடை ஊழியர், முக்கிய பங்கு வகித்துள்ளனர். விற்பனை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, இலக்கு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)