பதிவு செய்த நாள்
16 அக்2013
14:27
ஆயுத பூஜை உள்ளிட்ட தொடர் விடுமுறைகளால், டாஸ்மாக் கடைகளில், 270 கோடி ரூபாய்க்கு, மது வகைகள் விற்பனையாகி உள்ளன. தமிழகத்தில், 6,800க்கும் மேற்பட்ட, டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில், அரசு நிர்ணயம் செய்துள்ள விலையில், உள்நாட்டில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மது வகைகள் (ஐ.எம்.எப்.,) மற்றும் பீர் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன.
டாஸ்மாக் கடைகளில், நாள்தோறும், சராசரியாக, 67 கோடி ரூபாய் மதிப்பிற்கும், வார இறுதி நாட்களான, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில், 70-75 கோடி ரூபாய் மதிப்பிற்கும், மது வகைகள் விற்பனையாகின்றன. பொதுவாக, ஆங்கில புத்தாண்டு, பொங்கல், ஆயுதபூஜை, தீபாவளி உள்ளிட்ட சிறப்பு விடுமுறை தினங்களில், சரக்கு விற்பனை, சராசரி விற்பனையை விட, கூடுதலாக இருக்கும்.ஆயுத பூஜையை முன்னிட்டு, கடந்த ெவள்ளி கிழமை முதல், டாஸ்மாக் கடைகளில், சரக்கு விற்பனை களைக்கட்ட துவங்கியது.கடந்த வெள்ளிக்கிழமை, 78 கோடி; சனிக்கிழமை, 89 கோடி; ஞாயிற்று கிழமை, 103 கோடி ரூபாய் என, மொத்தம், 270 கோடி ரூபாய்க்கு, மதுவகைகள் விற்பனையாகி உள்ளன.
இதுகுறித்து, டாஸ்மாக் மாவட்ட மலோளர் ஒருவர் கூறியதாவது:வழக்கமான விற்பனையை விட, விடுமுறை தினங்களில் விற்பனை அதிகம் இருக்கும் என்பது எதிர்பார்த்தது தான். இதனால், கடைகளில், கூடுதலாக சரக்குகள் இருப்பு வைக்கப்பட்டன. விற்பனை அதிகரிப்பிற்கு, கடை ஊழியர், முக்கிய பங்கு வகித்துள்ளனர். விற்பனை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, இலக்கு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|