பதிவு செய்த நாள்
17 அக்2013
01:03
சென்னை: நேற்று, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 232 ரூபாய் உயர்ந்து, 22,816 ரூபாய்க்கு விற்பனையானது.சர்வதேசஅளவில், நேற்று, ஒரேநாளில், ஒரு அவுன்ஸ் தங்கம் விலை,30 டாலர்வரை உயர்ந்துஉள்ளது.இதனால், உள்நாட்டில், ஆபரணங்கள் விலை அதிகரித்து காணப்பட்டது.
சென்னையில், நேற்றுமுன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் ஒருகிராம், 2,823 ரூபாய்க்கும், ஒரு சவரன், 22,584 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 30,195 ரூபாய்க்கு விற்பனையானது.இந்நிலையில், நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 29 ரூபாய் உயர்ந்து, 2,852 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு, 232 ரூபாய் அதிகரித்து, 22,816 ரூபாய்க்கு விற்பனையானது. 10 கிராம் சுத்த தங்கம், 310 ரூபாய் உயர்ந்து, 30,505 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.ஒரு கிராம் வெள்ளி, 50.30 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 47,025 ரூபாய்க்கும் விற்பனையானது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|