ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.232 அதிகரிப்புஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.232 அதிகரிப்பு ... சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தமிழகத்திற்கு இரண்டாவது இடம் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தமிழகத்திற்கு இரண்டாவது இடம் ...
உருக்கு பயன்பாடு 3.66 கோடி டன்னாக உயர்ந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2013
01:12

புதுடில்லி : நாட்டின் உருக்கு பயன்பாடு, நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான, ஆறு மாத காலத்தில், 0.8 சதவீதம் வளர்ச்சி கண்டு, 3.66 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே ஆறு மாத காலத்தில், 3.63 கோடி டன்னாக இருந்தது என, மத்திய உருக்கு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இறக்குமதி:இதே காலத்தில், நாட்டின் உருக்கு இறக்குமதி, 25.2 சதவீதம் சரிவடைந்து, 39 லட்சம் டன்னிலிருந்து, 29 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. இதே போன்று, உருக்கு ஏற்றுமதியும், 0.4 சதவீதம் குறைந்து, 23 லட்சம் டன்னாக சரிவடைந்துள்ளது.அதேசமயம், கணக்கீட்டு காலத்தில், நாட்டின் உருக்கு உற்பத்தி, 6.2 சதவீதம் வளர்ச்சி கண்டு, 3.80 கோடி டன்னிலிருந்து, 4.03 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. உலகளவில், உருக்கு உற்பத்தியில், இந்தியா நான்காவது மிகப் பெரிய நாடாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதில், பொதுத் துறையைச் சேர்ந்த செயில் நிறுவனத்தின் உருக்கு உற்பத்தி, 5.8 சதவீதம் அதிகரித்து, 52.80 லட்சம் டன்னாகவும், ஆர்.ஐ.என்.எல்.,ன் உருக்கு உற்பத்தி, 11.8 சதவீதம் உயர்ந்து, 13.80 லட்சம் டன்னாகவும், டாட்டா ஸ்டீல் நிறுவனத்தின் உருக்கு உற்பத்தி, 27.4 சதவீதம் அதிகரித்து, 36.50 லட்சம் டன்னாகவும் உள்ளன.
சுணக்க நிலை:இந்திய மோட்டார் வாகனம் மற்றும் கட்டுமான துறைகளில் சுணக்க நிலை காணப்படுவதால், உருக்கு பயன்பாடு வளர்ச்சி காணவில்லை. சர்வதேச உருக்கு கூட்டமைப்பு, நடப்பாண்டில், இந்தியாவின் உருக்கு தேவை, 3.4 சதவீத அளவிற்கே வளர்ச்சி காணும் என, மறுமதிப்பீடு செய்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)