பதிவு செய்த நாள்
17 அக்2013
01:12
புதுடில்லி : நாட்டின் உருக்கு பயன்பாடு, நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான, ஆறு மாத காலத்தில், 0.8 சதவீதம் வளர்ச்சி கண்டு, 3.66 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே ஆறு மாத காலத்தில், 3.63 கோடி டன்னாக இருந்தது என, மத்திய உருக்கு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இறக்குமதி:இதே காலத்தில், நாட்டின் உருக்கு இறக்குமதி, 25.2 சதவீதம் சரிவடைந்து, 39 லட்சம் டன்னிலிருந்து, 29 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. இதே போன்று, உருக்கு ஏற்றுமதியும், 0.4 சதவீதம் குறைந்து, 23 லட்சம் டன்னாக சரிவடைந்துள்ளது.அதேசமயம், கணக்கீட்டு காலத்தில், நாட்டின் உருக்கு உற்பத்தி, 6.2 சதவீதம் வளர்ச்சி கண்டு, 3.80 கோடி டன்னிலிருந்து, 4.03 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. உலகளவில், உருக்கு உற்பத்தியில், இந்தியா நான்காவது மிகப் பெரிய நாடாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதில், பொதுத் துறையைச் சேர்ந்த செயில் நிறுவனத்தின் உருக்கு உற்பத்தி, 5.8 சதவீதம் அதிகரித்து, 52.80 லட்சம் டன்னாகவும், ஆர்.ஐ.என்.எல்.,ன் உருக்கு உற்பத்தி, 11.8 சதவீதம் உயர்ந்து, 13.80 லட்சம் டன்னாகவும், டாட்டா ஸ்டீல் நிறுவனத்தின் உருக்கு உற்பத்தி, 27.4 சதவீதம் அதிகரித்து, 36.50 லட்சம் டன்னாகவும் உள்ளன.
சுணக்க நிலை:இந்திய மோட்டார் வாகனம் மற்றும் கட்டுமான துறைகளில் சுணக்க நிலை காணப்படுவதால், உருக்கு பயன்பாடு வளர்ச்சி காணவில்லை. சர்வதேச உருக்கு கூட்டமைப்பு, நடப்பாண்டில், இந்தியாவின் உருக்கு தேவை, 3.4 சதவீத அளவிற்கே வளர்ச்சி காணும் என, மறுமதிப்பீடு செய்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|