பொருளாதாரம் உயரும்:ரகுராம் ராஜன்பொருளாதாரம் உயரும்:ரகுராம் ராஜன் ... இந்தியாவின் வளர்ச்சி 4.7 சதவீதமாக குறையும் - உலக வங்கி இந்தியாவின் வளர்ச்சி 4.7 சதவீதமாக குறையும் - உலக வங்கி ...
முடிவுக்கு வந்தது அமெரிக்க நிதி சிக்கல்: மசோதாவிற்கு பிரதிநிதிகள் சபை ஒப்புதல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2013
12:48

வாஷிங்டன் : கடன் உச்சவரம்பை உயர்த்துவதற்கான மசோதாவிற்கு அமெரிக்க செனட் சபையை தொடர்ந்து பிரதிநிதிகள் சபையும் ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதனையடுத்து கடந்த 2 வாரங்களாக அமெரிக்காவில் நிலவி வந்த பொருளாதார சிக்கல் முடிவுக்கு வந்துள்ளது.

நிதி சிக்கலுக்கு முடிவு : அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதையடுத்து பெரும்பாலான அரசு அலுவலகங்கள் அக்டோபர் 01ம் தேதி முதல் மூடப்பட்டன. இதனால் சுமார் 7 லட்சம் அரசு ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் நெருக்கடி நிலையை சமாளிக்க கடன் உச்சவரம்பை உயர்த்த மசோதா கொண்டு வரப்பட்டது. இதற்கு செனட் சபை ஒப்புதல் அளித்த பின்னரும் பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில் இன்று நடைபெற்ற விவாதத்தில் சுமார் 11 மணிநேரத்திற்கு பின் பிரதிநிதிகள் சபை ஒப்புதல் தெரிவித்தது. அமெரிக்க அதிபர் ஒபாமா, சுகாதாரச் சட்டத்தில் திருத்தம் கொண்ட வருவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை அடுத்து குடியரசு கட்சிகள் தங்களின் பிடிவாத போக்கை தளர்த்திக் கொண்டதால் பிரதிநிதிகள் சபை இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

ஒபாமா மகிழ்ச்சி : நிதி சிக்கலுக்கு முடிவு கட்டுவதற்கான மசோதாவிற்கு இரு சபைகளும் ஒப்புதல் தெரிவித்துள்ளதற்கு அதிபர் ஒபாமா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதால் அமெரிக்காவை சூழ்ந்திருந்த இருள் மேகங்கள் விலகி ஒளி பிறந்துள்ளதாகவும், இதனால் அமெரிக்க தொழில்களுக்கும், மக்களுக்கும் வாழ்வு கிடைத்துள்ளதாகவும் ஒபாமா தெரிவித்துள்ளார். தொடர்ந்து நெருக்கடி நிலையயை சமாளிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார். மேலும் அரசு அலுவலகங்களை உடனடியாக திறப்பதற்கான மசோதாவிலும் அவர் கையெழுத்திட்டார். இதனை வெள்ளை மாளிகை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

அரசு நிறுவனங்கள் திறக்கப்பட உள்ளதால் விடுமுறையில் சென்றுள்ள ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் முடங்கி இருந்த அரசு பணிகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)