பதிவு செய்த நாள்
18 அக்2013
02:43
புதுடில்லி : மத்திய அரசு, கோதுமை கொள்முதலுக்கான, குறைந்தபட்ச ஆதரவு விலையை, குவிண்டால் ஒன்றுக்கு, 50 ரூபாய் உயர்த்தி, 1,400 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது.
இது, கடந்த ஆண்டில்,1,350 ரூபாயாக இருந்தது என, மத்திய உணவு அமைச்சர் கே.வி.தாமஸ் தெரிவித்தார்.நடப்பு ரபி பருவத்தில், விவசாயிகளிடையே, கோதுமை பயிரிடும் ஆர்வத்தை அதிகரிக்கவே, குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளது என, அவர் மேலும் கூறினார்.நடப்பு பருவத்தில், கொள்முதல் செய்யும், ஒரு குவிண்டால் கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, கூடுதலாக, 50 ரூபாய் உயர்த்தப்பட்டு, 1,400 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, விதைப்பு பணிகள் அக்டோபரில் துவங்கப்பட்டு, ஏப்ரல் முதல் கோதுமை அறுவடை செய்யப்படுகிறது.மத்திய அரசு, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில், விவசாயிகளிடமிருந்து, கோதுமையை கொள்முதல் செய்கிறது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|