என்.எம்.டீ.சி., நிறுவனம்இரும்பு தாது உற்பத்தி 1.29 கோடி டன்னாக உயர்வுஎன்.எம்.டீ.சி., நிறுவனம்இரும்பு தாது உற்பத்தி 1.29 கோடி டன்னாக உயர்வு ... தமிழக கறிக்கோழிக்கு "பிளாட் ரேட்" நிர்ணயம் வரத்து குறைவால் கேரளாவுக்கு வருவாய் இழப்பு தமிழக கறிக்கோழிக்கு "பிளாட் ரேட்" நிர்ணயம் வரத்து குறைவால் ... ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
இறக்குமதி தங்கத்திற்கான மதிப்பு 418 டாலராக குறைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2013
02:45

புதுடில்லி : மத்திய அரசு, இறக்குமதி செய்யப்படும், 10 கிராம் தங்கத்தின் மதிப்பை, 418 டாலராகவும், ஒரு கிலோ வெள்ளியின் மதிப்பை, 699 டாலராகவும் குறைத்துள்ளது.
சர்வதேச நிலவரத்திற்கேற்ப, மத்திய சுங்க வரி துறை, 15 தினங்களுக்கு ஒரு முறை, இறக்குமதி செய்யப்படும், தங்கம், வெள்ளியின் மதிப்பை மாற்றி அமைத்து வருகிறது.இதற்கு முந்தைய, 15 தினங்களில், இறக்குமதி செய்யப்படும், 10 கிராம் தங்கத்தின் மதிப்பு, 436 டாலராகவும், ஒரு கிலோ வெள்ளியின் மதிப்பு, 702 டாலராகவும் இருந்தது.
சுங்க வரி துறை, மாற்றி அமைக்கும் மதிப்பின் அடிப்படையில் தான், மேற்கண்ட உலோகங்கள் மீது வரி விதிக்கப்படுகிறது.கடந்த 2012ம் ஆண்டில், நாட்டின் தங்கம் இறக்குமதி, 860 டன்னாக இருந்தது. நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்ததையடுத்து, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும், தங்கம் இறக்குமதிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தையடுத்து, இதன் இறக்குமதி கணிசமாக குறைந்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும், ஒரு டன் கச்சா பாமாயில் மதிப்பும், 883 டாலரிலிருந்து, 866 டாலராகவும், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மதிப்பு, 886 டாலரிலிருந்து, 869 டாலராகவும் குறைக்கப்பட்டுள்ளது.இறக்குமதி செய்யப்படும், ஒரு டன் கச்சா சோயா எண்ணெயின் மதிப்பும், 966 டாலரிலிருந்து, 952 டாலராக குறைக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)