பதிவு செய்த நாள்
18 அக்2013
02:45
புதுடில்லி : மத்திய அரசு, இறக்குமதி செய்யப்படும், 10 கிராம் தங்கத்தின் மதிப்பை, 418 டாலராகவும், ஒரு கிலோ வெள்ளியின் மதிப்பை, 699 டாலராகவும் குறைத்துள்ளது.
சர்வதேச நிலவரத்திற்கேற்ப, மத்திய சுங்க வரி துறை, 15 தினங்களுக்கு ஒரு முறை, இறக்குமதி செய்யப்படும், தங்கம், வெள்ளியின் மதிப்பை மாற்றி அமைத்து வருகிறது.இதற்கு முந்தைய, 15 தினங்களில், இறக்குமதி செய்யப்படும், 10 கிராம் தங்கத்தின் மதிப்பு, 436 டாலராகவும், ஒரு கிலோ வெள்ளியின் மதிப்பு, 702 டாலராகவும் இருந்தது.
சுங்க வரி துறை, மாற்றி அமைக்கும் மதிப்பின் அடிப்படையில் தான், மேற்கண்ட உலோகங்கள் மீது வரி விதிக்கப்படுகிறது.கடந்த 2012ம் ஆண்டில், நாட்டின் தங்கம் இறக்குமதி, 860 டன்னாக இருந்தது. நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்ததையடுத்து, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும், தங்கம் இறக்குமதிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தையடுத்து, இதன் இறக்குமதி கணிசமாக குறைந்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும், ஒரு டன் கச்சா பாமாயில் மதிப்பும், 883 டாலரிலிருந்து, 866 டாலராகவும், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மதிப்பு, 886 டாலரிலிருந்து, 869 டாலராகவும் குறைக்கப்பட்டுள்ளது.இறக்குமதி செய்யப்படும், ஒரு டன் கச்சா சோயா எண்ணெயின் மதிப்பும், 966 டாலரிலிருந்து, 952 டாலராக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|