பதிவு செய்த நாள்
18 அக்2013
02:58
மும்பை : நாட்டின் பங்கு வர்த்தகம், நேற்று மந்தமாகவே இருந்தது. சாதகமற்ற சர்வதேச நிலவரம் மற்றும் முதலீட்டாளர்கள லாப நோக்கம் கருதி அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தது போன்றவற்றால், இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மிகவும் மந்தமாக இருந்தது.இருப்பினும், அமெரிக்க நிதி சிக்கலுக்கு தீர்வு காணப்பட்டதையடுத்து, இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்தது.நேற்றைய வியாபாரத்தில், தகவல் தொழில்நுட்பம், பொறியியல் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.அதேசமயம், எண்ணெய், எரிவாயு, நுகர் பொருட்கள் மற்றும் நுகர்வோர் சாதன துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு, ஓரளவிற்கு தேவை காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 132.11 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 20,415.51 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 20,629.80 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 20,375.42 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்" கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், டி.சி.எஸ்., டாட்டா மோட்டார்ஸ், எல் அண்டு டி உள்ளிட்ட, 18 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், பார்தி ஏர்டெல், ஓ.என்.ஜி.சி., ரிலையன்ஸ் உள்ளிட்ட, 11 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பங்கின் விலை மாற்றமின்றியும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி", 43.20 புள்ளிகள் குறைந்து, 6,045.85 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 6,110.75 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 6,032.55 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|