தமிழக கறிக்கோழிக்கு "பிளாட் ரேட்" நிர்ணயம் வரத்து குறைவால் கேரளாவுக்கு வருவாய் இழப்புதமிழக கறிக்கோழிக்கு "பிளாட் ரேட்" நிர்ணயம் வரத்து குறைவால் ... ... இறக்குமதி கச்சா எண்ணெய்க்கு இந்திய ரூபாய் :ஈரானிடம் மத்திய அரசு கண்டிப்பு இறக்குமதி கச்சா எண்ணெய்க்கு இந்திய ரூபாய் :ஈரானிடம் மத்திய அரசு ... ...
அரசு முகமை அமைப்புகளிடம் உள்ளஉணவு தானிய கையிருப்பு குறைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2013
03:01

புதுடில்லி : மத்திய, மாநில அரசுகளின் முகமை அமைப்புகளிடம் உள்ள உணவு தானியங்களின் கையிருப்பு, நடப்பு அக்டோபர் மாத துவக்கத்தில், 5.51 கோடி டன்னாக குறைந்துள்ளது.
இது, சென்ற மாதம், 5.90 கோடி டன்னாகவும், கடந்த ஆண்டு, இதே காலத்தில், 6 கோடி டன் என்ற அளவிலும் இருந்தது.இந்திய உணவு கழகம் மற்றும் மாநில அரசுகளின் முகமை அமைப்புகள், நடப்பு 2013-14ம் நிதிஆண்டிற்கு, இம்மாத துவக்கத்தில் இருந்து நெல் கொள்முதல் செய்யத் துவங்கியுள்ளன.
தற்போது, இந்த அமைப்புகளின் கையிருப்பில், 1.90 கோடி டன் அரிசியும், 3.61 கோடி டன் கோதுமையும் உள்ளன. இது, உபரி கையிருப்பை சேர்த்து நிர்ணயிக்கப் பட்டுள்ள, 2.12 கோடி டன்னை விட, இரு மடங்கிற்கும் அதிகம்.உணவு பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசுக்கு ஆண்டுக்கு, 6-6.10 கோடி டன்உணவு தானியம் தேவைப்படும். கரீப் பருவ நெல் மற்றும் ரபி பருவ கோதுமை ஆகியவற்றின் உற்பத்தி, சாதனை அளவாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றை கொள்முதல் செய்ய, போதுமான அளவிற்கு கிடங்கு வசதி இல்லாத நிலை உள்ளது.
முகமை அமைப்புகளிடம், 6.10 கோடி டன் உணவு தானியங்களை சேமிக்கும் அளவிற்குத் தான் கிடங்கு வசதி உள்ளது. இதில், 1.80 கோடி டன் உணவு தானியங்களை வைப்பதற்கான வெற்றிடமும் அடங்கும். இயற்கை இடர்பாடு காரணமாக, இங்கு நீண்ட காலத்திற்கு உணவு தானியங்களை இருப்பில் வைத்திருக்க முடியாது.
இதனால், மத்திய அரசு, 85 லட்சம் டன் என்ற அளவிலான உபரி கோதுமையை, வெளிச் சந்தையில் விற்க, அரசு முகமை அமைப்புகளுக்கு அனுமதி வழங்கி யுள்ளது. இத்துடன், மேலும், 20 லட்சம் டன் கோதுமையை ஏற்றுமதி செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இதனால், முகமை அமைப்புகளின் கிடங்குகளில் இருந்து, உணவு தானியங்களை வெளியே அனுப்பும் பணி முடுக்கி விடப்பட்டுள் ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)