பதிவு செய்த நாள்
19 அக்2013
01:16
புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த பீ.எஸ்.என்.எல்., நிறுவனம் உலகின் பல்வேறு நாடுகளுக்கான அழைப்பு கட்டணத்தை சிறப்பு சலுகை திட்டத்தின் மூலம், 75 சதவீதம் குறைப்பதாக அறிவித்துள்ளது.இதன்படி, சிறப்பு கட்டண திட்டத்தின் கீழ், பிரிபெய்டு வாடிக்கையாளர்களுக்கு, 23 ரூபாய் முதல் 41 ரூபாய் வரையிலும், போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர் களுக்கு, நிலையான அளவில், 20 முதல் 40 ரூபாய் வரையில் மாதாந்திர கட்டணம் செலுத்தி இந்த சலுகையை பெற்றுக் கொள்ளலாம்.
இதற்கு எடுத்துக்காட்டாக, பிரிபெய்டு வாடிக்கையாளர்கள், சிறப்பு கட்டண திட்டத்தின் கீழ், 41 ரூபாய் செலுத்தி, அமெரிக்கா, கனடா மற்றும் சிங்கப்பூரில் உள்ளோரிடம், நிமிடத்திற்கு, 1.49 ரூபாயில் பேசலாம்.அதேசமயம், சாதாரண கட்டணத்தில், நிமிடத்திற்கு, 6 ரூபாய் செலுத்த வேண்டும்.இதேபோன்று, தற்போது சீனாவில் உள்ளவருடன் பேச நிமிடத்திற்கு, 10 ரூபாய் செலவிட வேண்டிய நிலையில், இந்த சிறப்பு திட்டத்தின் கீழ், நிமிடத்திற்கு, 1.49 ரூபாயில் பேசலாம்.
போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்கள், மாதாந்திர கட்டண அடிப்படையில், 40 ரூபாய் செலுத்தி, இந்த குறைந்த கட்டண சேவையை பெற்றுக் கொள்ளலாம்.மேலும், ெவளிநாடுகளுக்கான குறுந்தகவல் சேவை (எஸ்.எம்.எஸ்.,) கட்டணம் 5 ரூபாயிலிருந்து, 3 ரூபாயாக குறைக்கப்படுகிறது.அண்மையில், மொபைல் போன் சேவையில் ஈடுபட்டு வரும் பல நிறுவனங்கள், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவால், சர்வதேச அழைப்பு கட்டணத்தை, 80 சதவீதம் வரை உயர்த்தின.
இந்நிலையில், பீ.எஸ்.என்.எல். நிறுவனம் சலுகை கட்டண சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|