பதிவு செய்த நாள்
19 அக்2013
01:18
புதுடில்லி:கடந்த 2012–13ம் நிதியாண்டில், முட்டைகோஸ் உற்பத்தி, 83.95 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 84.12 லட்சம் டன்னாக இருந்தது என, ‘அபெடா’ அமைப்பின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த நான்கு ஆண்டுகளாக, தொடர்ந்துஅதிகரித்து வந்த முட்டைகோஸ் உற்பத்தி, கடந்தாண்டில், ஒரு சில மாநிலங்களில் ஏற்பட்ட வறட்சி நிலையால், குறைந்துள்ளது.
கடந்த 2008–09ம் நிதியாண்டில், முட்டைகோஸ் உற்பத்தி, 68.70 லட்சம் டன்னாக இருந்தது. இது, 2009–10ம் நிதியாண்டில், 72.82 லட்சம் டன்னாகவும், 2010–11ல், 79.49 லட்சம் டன்னாகவும் இருந்தது.உள்நாட்டில், மேற்குவங்க மாநிலத்தில் தான், முட்டைகோஸ் உற்பத்தி, மிகவும் அதிகமாக உள்ளது. கடந்த நிதியாண்டில், இம்மாநிலத்தில் இதன் உற்பத்தி, 21.79 லட்சம் டன்னாக இருந்தது. இதையடுத்து, ஒடிசா மாநிலத்தில் இதன் உற்பத்தி, 11.48 லட்சம் டன்னாக இருந்தது.
மேற்கண்ட மாநிலங்கள் தவிர, பீகார் (7.79 லட்சம டன்), குஜராத் (6.54), அசாம் (6.53), ஜார்க்கண்ட் (4.30), மகாராஷ்டிரா (4.21), மத்திய பிரதேசம் (4.14), சத்தீஸ்கர் (2.96) , அரியானா (2.70 லட்சம் டன்) ஆகிய மாநிலங்களிலும் முட்டைகோஸ் மிக அதிகளவில் உற்பத்தியாகிறது என, ‘அபெடா’வின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|