பீ.எஸ்.என்.எல்., சர்வதேச அழைப்புகட்டணம் 75 சதவீதம் குறைப்புபீ.எஸ்.என்.எல்., சர்வதேச அழைப்புகட்டணம் 75 சதவீதம் குறைப்பு ... சூரியகாந்தி விதை விலை குறைவால்கையிருப்பை விற்குமாறு யோசனை சூரியகாந்தி விதை விலை குறைவால்கையிருப்பை விற்குமாறு யோசனை ...
வர்த்தகம் » ஜவுளி
தேவை குறைவால் நூலிழை விலை குறைந்து வருகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 அக்
2013
01:19

கடந்த ஒரு சில வாரங்களாக, பருத்தி நுாலிழை விலை குறையத் துவங்கியுள்ளது. கையிருப்பு அதிகரித்துள்ளதாலும், இதற்கான தேவை குறைந்துள்ளதாலும், நுாலிழை விலை, கடந்த ஒரு மாத காலத்தில், 5–7 சதவீதம் குறைந்துள்ளது.
கையிருப்பு:இதுகுறித்து, தென்னிந்திய ஆலைகள் கூட்டமைப்பின் தலைமை செயலர் கே. செல்வராஜ் கூறியதாவது:துணி உற்பத்தியாளர்களிடமிருந்து, நுாலிழைகளுக்கான ஆர்டர்கள் மிகவும் குறைந்துள்ளன. இந்நிலையில், நூலிழை கையிருப்பும் அதிகமாக உள்ளது. மேலும், கடந்த செப்டம்பர் மாதத்தின், இரண்டாவது வாரத்தில் இருந்து, பருத்தியின் விலை, கேண்டிக்கு (ஒரு கேண்டி–356 கிலோ), 3,500 ரூபாய் குறைந்துள்ளது.கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி, ஒரு கிலோ கோம்ப்டு பருத்தி நூலிழை விலை, 281 ரூபாயாக இருந்தது. இது, தற்போது, 261 ரூபாயாக சரிவடைந்துள்ளது.இதே போன்று, 4.54 கிலோ கொண்ட ஒரு பண்டில், ஹேங்க்டு பருத்தி நூலிழையின் விலை, செப்டம்பர் மாதம் மத்தியில், 1,115 ரூபாயாக இருந்தது. இது, தற்போது, 1,085 ரூபாயாக குறைந்துள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், வர்த்தகர்கள் வசம், 16 லட்சம் கிலோ பருத்தி நுாலிழை கையிருப்பு உள்ளது.இந்திய பருத்தி நூலிழை விலை அதிகமாக உள்ளது. இது, குறைய வாய்ப்புள்ளது என்ற நிலைப்பாட்டில், இந்தியாவிலிருந்து, அதிகளவில் பருத்தி நுாலிழைகளை இறக்குமதி செய்து வந்த சீனா, தற்போது, இதனை முற்றிலுமாக நிறுத்தியுள்ளது என, பருத்தி நுாலிழை வர்த்தகரான அருண் தலால் தெரிவித்தார்.
சீனா தவிர்த்த இதர புதிய நாடுகளுக்கு, நூலிழை ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு, பாரம்பரிய சந்தைகளுக்கான நூலிழை ஏற்றுமதிக்கு அளித்து வந்த சலுகைகளை தற்போது, நிறுத்தியுள்ளது.இதுவும், நூலிழை வர்த்தகத்தை பாதிப்பதாக உள்ளது என, ஆந்திராவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் குறிப்பிட்டார்.
செயற்கை நூலிழை:சென்ற செப்டம்பர் மாதத்தில், பருத்தி நூலிழை விலை, மிகவும் அதிகரித்ததையடுத்து, பல ஆடை தயாரிப்பு நிறுவனங்கள், செயற்கை நூலிழை வகைகளை அதிகளவில் கொள்முதல் செய்யத் துவங்கின. இந் நிலையில், நடப்பாண்டில், சீனா, இந்தியாவிலிருந்து, பருத்தி வாங்காது என்றும், அதற்கு பதிலாக, பருத்தி நூலிழையை வாங்க துவங்கும் என, சந்தையாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.அவ்வாறு, சீனா, அதிகளவில் பருத்தி நூலிழைகளை வாங்க துவங்கும் நிலையில், இதன் விலை உயர வாய்ப்புள்ளது.நாட்டின் மொத்த பருத்தி நுாலிழை ஏற்றுமதியில், சீனாவின் பங்களிப்பு, தற்போது, 40–50 சதவீதம் என்ற அளவில் உள்ளது என, வர்த்தகர்கள் மேலும் தெரிவித்தனர்.
– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)