சூரியகாந்தி விதை விலை குறைவால்கையிருப்பை விற்குமாறு யோசனைசூரியகாந்தி விதை விலை குறைவால்கையிருப்பை விற்குமாறு யோசனை ... ‘பொதுத்துறை நிறுவனங்கள் அதிக டிவிடெண்டு வழங்க வேண்டும்’ ‘பொதுத்துறை நிறுவனங்கள் அதிக டிவிடெண்டு வழங்க வேண்டும்’ ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு சந்தையில் எழுச்சி நிலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 அக்
2013
01:26

மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான, நேற்று மிகவும் சிறப்பாக இருந்தது. சாதகமான சர்வதேச நிலவரங்கள் மற்றும் அன்னிய நிதி நிறுவனங்கள், அதிகளவில் இந்திய நிறுவனப் பங்குகளில் முதலீடு மேற்கொண்டது போன்றவற்றால், ‘சென்செக்ஸ்’ 2.29 சதவீதம் மற்றும் ‘நிப்டி’ 2.37 சதவீதம் உயர்வுடன் முடிவடைந்தன.
மூன்றாவது காலாண்டில், சீனா 7.8 சதவீத பொருளாதார வளர்ச்சியை கண்டுள்ளது என்ற செய்தியால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப்பங்குச்சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. இதுவும், இந்திய பங்கு வர்த்தகத்திற்கு வலுச் சேர்த்தது.
நேற்றைய வியாபாரத்தில், வங்கி, உலோகம், பொறியியல் உள்ளிட்ட அனைத்து துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளும் அதிக விலைக்கு கைமாறின. மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 467.38 புள்ளிகள் அதிகரித்து, 20,882.89 புள்ளிகளில் நிலைகொண்டது.
வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 20,932.23 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 20,486.78 புள்ளிகள் வரையிலும் சென்றது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 143.50 புள்ளிகள் உயர்ந்து, 6,189.35 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிக பட்சமாக, 6,201.45 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 6,070.90 புள்ளிகள் வரையிலும் சென்றது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)