பதிவு செய்த நாள்
20 அக்2013
00:27
கொச்சி:துபாயில் இருந்து கொச்சிக்கு, ஒரு கிலோ தங்கக் கட்டியை மறைத்து எடுத்து வந்தவரிடம், சுங்க வரியாக, 2.87 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டது.கேரளாவின் முவ்வாட்டுபுழாவை சேர்ந்த அஷ்ரப், துபாயில் இருந்து, கொச்சிக்கு விமானத்தில் வந்தார். அவர், விமான நிலைய வாசலை கடக்கும் போது, மெட்டல் டிடெக்டர் சாதனம், பீப்... பீப்.. என, எச்சரிக்கை ஒலி எழுப்பியது.உடனே உஷாரான சுங்க அதிகாரிகள், மானிட்டரில் அவரது ஸ்கேனிங் படத்தை பார்த்தனர். அதில், அஷ்ரப், தனது பேண்ட் பாக்கெட்டில், தங்கக் கட்டி ஒன்றை மறைத்து வைத்திருந்தது தெரிந்தது.
உடனே, சுதாரித்துக் கொண்ட அஷ்ரப், நேரடியாக அதிகாரி களிடம் சென்று, தான் தங்கம் கொண்டு வந்துள்ளதை கூறி, அதற்குண்டான சுங்க வரியை செலுத்துவதாக தெரிவித்தார்.இதை ஏற்றுக் கொண்ட அதிகாரிகள், 28 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்திற்கு, சுங்க வரியாக, 2.87 லட்சம் ரூபாய் வசூலித்த பின்னர், அஷ்ரப்பை வெளியில் விட்டனர்.வரி செலுத்தி விட்டதால் அவர் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொச்சியில், ஒரு கிலோ, 24 காரட் சுத்த தங்கத்தின் நேற்றைய விலை, 31 லட்சத்து 7,000 ரூபாயாக இருந்தது. இதனுடன், 1 சதவீத விற்பனை வரியை சேர்த்தால், 31,38,070 ரூபாயாகும்.இந்த கணக்கின்படி, 51,௦70 ரூபாய் லாபம் என்று மனதில் கணக்கிட்டபடி, நடையை கட்டியிருப்பார் அஷ்ரப்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|