பதிவு செய்த நாள்
24 அக்2013
00:44
உள்நாட்டு சந்தையில், இயற்கை ரப்பர் வரத்து அதிகரித்துள்ளதால், அதன் விலை கடுமையாக சரிவடைந்துள்ளது.கொச்சி சந்தையில், ஒரு கிலோ ‘ஆர்.எஸ்.எஸ்–4’ ரக இயற்கை ரப்பர் விலை,160 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. இது, கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பிறகு காணப்படும் மிகப்பெரிய சரிவு என, ரப்பர் வர்த்தகர்கள் தெரிவித்தனர். நடப்பாண்டு இயற்கை ரப்பர் உற்பத்தி குறைந்துள்ளது. அதனால், ரப்பருக்கான தேவை அதிகரித்து, அதன் விலை உயரும் என, எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கு மாறாக, இயற்கை ரப்பர் விலை உயர்ந்துள்ளதற்கு, அதன் இறக்குமதி தான் காரணம். இறக்குமதி செய்யப்பட்டஇயற்கைரப்பர் தாராளமாக கிடைப்பதால், உள்நாட்டில் இதன்விலை மிகவும் சரிவடைந்துள்ளது.நடப்புசெப்டம்பர் மாதத்தில், கடந்த மூன்று வாரங்களில், இயற்கை ரப்பர் விலை, 10 சதவீதம் குறைந்து, கிலோ, 177 ரூபாயாக சரிவடைந்தது.
இது, தற்போது, மேலும்வீழ்ச்சி கண்டு, 160 ரூபாயாக குறைந்துள்ளது. வரும் ஜனவரி வரை, உள்நாட்டுசந்தையில், இயற்கை ரப்பர்வரத்து அதிகரிக்கும் என்பதால், அதன் விலை மேலும் குறையும் என, தெரிகிறது.இதுகுறித்து ரப்பர் வர்த்தகர் ஒருவர் கூறும்போது, "இயற்கை ரப்பருக்கு தற்போது, முக்கியமான உற்பத்தி காலமாகும். மாதத்திற்கு சராசரியாக, 1 லட்சம் டன் இயற்கை ரப்பர் உற்பத்தியாகும். இதன் காரணமாக, இதன் விலை, மேலும் சரிவடைந்து, கிலோ, 158 ரூபாயாக குறையவும் வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தார்.
– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|