பதிவு செய்த நாள்
24 அக்2013
00:46
பெங்களூரு:இந்தியாவில், தகவல் தொழில் நுட்ப (ஐ.டி.,) வசதிகளுக்காக செலவிடும் தொகை, நடப்பு 2013ம் ஆண்டில், 6,740 கோடி டாலராக (4 லட்சம் கோடிரூபாய்) அதிகரிக்கும் என, கார்ட்னர் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது, வரும் 2014ம் ஆண்டில், 5.9 சதவீதம் வளர்ச்சி கண்டு, 7,130 கோடி டாலராக (4.28 லட்சம் கோடி ரூபாய்) உயரும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.குறிப்பாக, இந்தியாவில், சாப்ட்வேர் பணிகளுக்காக செலவிடுவது, 10 சதவீதமும், ஐ.டி., சேவைகளுக்காக செலவிடும் தொகை, 12.1 சதவீதமும் வளர்ச்சி காணும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய தகவல்தொடர்பு தொழில்நுட்பசந்தையில், தொலைத் தொடர்பு சேவையின் பங்களிப்பு, 42.1 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இத்துறை, வரும் 2014ம் ஆண்டில், 2 சதவீதம் வளர்ச்சி காணும் என, கார்ட்னர்தெரிவித்து உள்ளது. தொலை தொடர்பு சேவையில், மொபைல் போன், தொலைபேசி, மற்றும் குரல் வழிசேவை ஆகியவை அடங்கும். அடுத்த ஆண்டில், இதற்காக, செலவிடும் தொகை, 3,000 கோடி டாலரை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், கம்ப்யூட்டர்கள், டேப்லெட்டுகள், பிரின்டர்கள்ஆகியவற்றிற்காக செலவிடும் தொகையும்,அடுத்தஆண்டில், 6 சதவீதம் உயர்ந்து, 2,350 கோடி டாலராக அதிகரிக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது.அடுத்த ஆண்டில், தகவல் தொழில்நுட்ப பணிகளுக்காக செலவிடுவது, 13 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,120 கோடி டாலரை எட்டும் எனவும், இதில், சாப்ட்வேர்களுக்காக செலவிடும் தொகை, 410 கோடி டாலராக இருக்கும் எனவும், கார்டனர் மேலும் தெரிவித்துள்ளது.
வளர்ந்துவரும் நாடுகளின் தகவல் தொழில்நுட்பசந்தைகளில், இந்தியா மூன்றாவது பெரிய நாடாக விளங்குகிறது. மேலும், ஆசிய– பசிபிக் பிராந்திய நாடுகளுடன் ஒப்பிடும் போது, தகவல் தொழில்நுட்ப சந்தையில், இந்தியா நான்காவது மிகப்பெரிய நாடாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|