ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.240 உயர்வுஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.240 உயர்வு ... ரூபாயின் மதிப்பில் ஏற்றம் - ரூ.61.46 ரூபாயின் மதிப்பில் ஏற்றம் - ரூ.61.46 ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
தமிழக ஏலக்காய் விவசாயிகளுக்கு கேரளாவில் நெருக்கடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2013
00:54

கம்பம்:கேரள அதிகாரிகளால், நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்ற அச்சத்தில், தமிழக ஏலக்காய் விவசாயிகள் உள்ளனர்.
இந்திய ஏலக்காய் சாகுபடியில், கேரள மாநிலம் முதலிடத்தில் உள்ளது. நாட்டின் மொத்த ஏலக்காய் சாகுபடியில், 80 சதவீதம், இடுக்கி மாவட்டத்தில் (1.5 லட்சம் ஏக்கர்) மேற்கொள்ளப்படுகிறது.
தேனி மாவட்டம்:ஏலக்காய் தோட்டங்களில், 70 சதவீதம் தேனி மாவட்ட விவசாயிகளிடம் உள்ளது. இங்கு சாகுபடி செய்யப்படும் ஏலக்காய், நறுமண பொருள்கள் வாரியத்தின் ஏல மையத்தில் விற்பனை செய்யப்படுகிறது.இந்த விற்பனையில் கலந்து கொண்டு, கொள்முதல் செய்வதும் தமிழக வியாபாரிகளேயாகும். போடி, தேவாரம், விருதுநகர், கம்பம் பகுதிகளைச் சேர்ந்தவர்களே, வியாபாரம் செய்கின்றனர்.
கடந்த ஆண்டு, முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில், கேரளாவிற்கு எதிரான போக்கு, தேனிமாவட்டத்தில் எதிரொலித்தது.அப்போதிருந்தே, இடுக்கி மாவட்டத்தில், தமிழர்களுக்கு எதிரான போக்கு நிலவுகிறது. அங்குள்ள அரசியல்வாதிகள் அதை பெரிதாக்கி வருகின்றனர்.
கொள்முதல்:இங்குள்ள தோட்டங்களில் சாகுபடி செய்வதும் தமிழர்கள், ஏலக்காய் கொள்முதல் செய்வதும் தமிழர்கள், தொழிலாளர்களும் தமிழர்கள் என்பதால், ஒருவித வெறுப்பு ஏற்பட்டுள்ளது. கம்பம் பகுதியில் இருந்து, ஏலக்காய் தோட்டங்களுக்கு தினந்தோறும், 1,000 ஜீப்புகளில், தொழிலாளர்கள் வேலைக்கு சென்று வருகின்றனர்.
கடந்த வாரம் திடீரென, நெடுங்கண்டம் பகுதியில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள், ஜீப்புகளுக்கு, டூரிஸ்ட் பெர்மிட் வாங்க வேண்டும், என்று வலியுறுத்தி நடவடிக்கை எடுத்தனர். இதனால், ஜீப் வைத்திருப்பவர்கள், கேரளாவிற்கு செல்லாமல் இருந்தனர். ஏலக்காய் விவசாயிகள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.இருந்தாலும், ஒரு மாதத்திற்குள் டூரிஸ்ட் பெர்மிட் எடுக்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில், ஜீப்புகளை அனுமதிக்க முடியாது என்றும், கூறியுள்ளனர்.
ஆனால், டூரிஸ்ட் பெர்மிட் எடுத்தால் ஜீப்புகளை இயக்க முடியாது என்றும், ஜீப் உரிமையாளர்கள் கூறுகின்றனர். வரி, மிக அதிகமாக இருக்கும் என்றும், அதனால் இழப்பு ஏற்படும் எனவும் அவர்கள், கூறுகின்றனர்.

கோரிக்கை:இதுவரை இல்லாத வழக்கமாக, தற்போதுதிடீரென கேரள அதிகாரிகள், டூரிஸ்ட் பெர்மிட் எடுக்க சொல்ல காரணம் என்ன, என்று கேள்வி எழுப்புகின்றனர். தங்களுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும், என்பதுதான் கேரள அதிகாரிகளின் திட்டம் என்று, ஏல விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது.தமிழக அரசு இந்த விஷயத்தில் கேரள அரசுடன் பேசி, சுமுக தீர்வு காண வேண்டும் என, ஏலக்காய் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)