பதிவு செய்த நாள்
24 அக்2013
00:56
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், நேற்று, அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. சாதகமற்ற சர்வதேச நிலவரங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி, அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தது போன்றவற்றால், ‘சென்செக்ஸ்’ மற்றும் ‘நிப்டி’ முறையே, 0.47 மற்றும் 0.39 சதவீத சரிவுடன் முடிவடைந்தன.
ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் சுணக்கமாகவே இருந்தது. நேற்றைய வியாபாரத்தில், ரியல் எஸ்டேட், மின்சாரம், தகவல் தொழில் நுட்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. அதேசமயம், பொறியியல், வங்கி, நுகர்பொருட்கள் மற்றும் நுகர்வோர் சாதன துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு, தேவை காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 97.09 புள்ளிகள் சரிவடைந்து, 20,767.88 புள்ளிகளில் நிலைபெற்றது.வர்த்தகத்தின் இடையே, இப்பங்குசந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 20,922.32 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 20,589.72 புள்ளிகள் வரையிலும் சென்றது.
‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், விப்ரோ, சன் பார்மா, பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட, 21 நிறுவனப் பங்குகளின் விலை, சரிவடைந்தும், கெயில், சிப்லா, எல் அண்டு டி உள்ளிட்ட, 9 நிறுவனப் பங்குகளின் விலை, உயர்ந்தும் இருந்தது.தேசிய பங்குசந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 24.45 புள்ளிகள் குறைந்து, 6,178.35 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 6,217.95 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 6,116.60 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|