ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.240 உயர்வுஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.240 உயர்வு ... ரூபாயின் மதிப்பில் ஏற்றம் - ரூ.61.46 ரூபாயின் மதிப்பில் ஏற்றம் - ரூ.61.46 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
மக்களிடம் திரட்டும் டெபாசிட்டிற்குநிறுவனங்கள் காப்பீடு வழங்க வேண்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2013
00:59

புதுடில்லி:முதலீட்டாளர்களிடம் திரட்டும் டெபாசிட்டிற்கு, நிறுவனங்கள் காப்பீட்டு வசதி வழங்க வேண்டும்; தவறினால் ஆண்டுக்கு, 18 சதவீதம் வரையிலான வட்டி விகித அடிப்படையில், அபராதம் வசூலிக்கப்படும் என, நிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதிக வட்டி தருவதாக, ஆசை காட்டி, முறைகேடாக டெபாசிட் திரட்டும் நிறுவனங்களுக்கு கிடுக்கிப் பிடி போடும் வகையில், புதிய விதிமுறைகள் கொண்ட வரைவு அறிக்கையை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.‘நிறுவனங்கள் திரட்டும் டெபாசிட்டுகளுக்கான கட்டுப்பாடுகள்’ என்ற அந்த வரைவு அறிக்கையின் சாராம்சம்:முதலீட்டாளர்களின் டெபாசிட்டிற்கு, காப்பீட்டு வசதியை நிறுவனங்கள் வழங்க வேண்டும். காப்பீட்டிற்கான பிரிமியத்தை நிறுவனங்களே செலுத்த வேண்டும்.
முதலீட்டாளர்களின் டெபாசிட்டிற்கு காப்பீட்டு வசதி அளிக்கத் தவறினால், ஆண்டுக்கு, குறைந்தபட்சம், 15 சதவீத வட்டி வீதம், நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.முதலீடுகளுக்கு மிக அதிக வருவாய் கிடைக்கும் என்ற உத்தரவாதத்தை நிறுவனங்கள் வழங்கக் கூடாது.டெபாசிட்டுகளை திரட்டும் முகவர்களுக்கு, தற்போது ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளதை விட, மிக அதிக தொகை வழங்கக் கூடாது.
விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மற்றும் அதன் ஒவ்வொரு அதிகாரிகளுக்கும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து விதிமுறைகளை மீறுவோருக்கு, நாள்தோறும், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப் படும்.டெபாசிட்டுகளை திரட்டும் அனைத்து நிறுவனங்களும், ஒரு வங்கியில், திரும்பச் செலுத்தும் டெபாசிட்டிற்கான இருப்பு கணக்கு ஒன்றை துவக்க வேண்டும். அதில், நிறுவனம் திரட்டும் மொத்த டெபாசிட்டில், குறைந்தபட்சம், 15 சதவீத தொகையை டெபாசிட் செய்திருக்க வேண்டும்.
புதிய விதிமுறைகளை பின்பற்றத் தவறும் நிறுவனங்கள் மீது, கடும் நடவடிக்கை எடுககப்படும்.இவ்வாறு வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)