பதிவு செய்த நாள்
25 அக்2013
00:47
புதுடில்லி:உள்நாட்டில் கச்சா எண்ணெய் உற்பத்தி, சென்ற செப்டம்பர் மாதத்தில், 30.81 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. கடந்தாண்டு இதே மாதத்தில், இதன் உற்பத்தி, 30.64 லட்சம் டன்னாக இருந்தது.
ஆக, மதிப்பீட்டு மாதத்தில், நாட்டின் கச்சா எண்ணெய் உற்பத்தி, 0.6 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேசமயம், மதிப்பீட்டு மாதத்தில், இயற்கை எரிவாயு உற்பத்தி, 14.1 சதவீதம் சரிவடைந்து, 336.30 கோடி கனமீட்டரிலிருந்து, 288.90 கோடி கனமீட்டராக சரிவடைந்துள்ளது.
உள்நாட்டில் பெட்ரோலியப் பொருட்கள் பயன்பாடு, சென்ற செப்டம்பரில், 2 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1.19 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. இது, கடந்தாண்டு, இதே மாதத்தில், 1.16 கோடி டன்னாக இருந்தது.கடந்த 2004–05ம் நிதியாண்டுடன் ஒப்பிடும் போது, தற்போது, உள்நாட்டில், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு திறன், 68.87 சதவீதம் அதிகரித்து, 21.50 கோடி டன்னாக (நடப்பாண்டு ஏப்ரல் 1ம் தேதி நிலவரப்படி) வளர்ச்சி கண்டுள்ளது.
இது, வரும் 2015–16ம் நிதியாண்டிற்குள், 26.50 கோடி டன்னாக உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.குறிப்பாக, சென்ற செப்டம்பர் மாதத்தில் மட்டும், நாட்டின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்புதிறன், 7.9 சதவீதம் வளர்ச்சி கண்டு,1.71 கோடி டன்னிலிருந்து, 1.84 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.உள்நாட்டில், 17 பொதுத் துறை நிறுவனங்கள், 3 தனியார் துறை நிறுவனங்கள் உட்பட 22 நிறுவனங்கள், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|