பதிவு செய்த நாள்
25 அக்2013
00:54
புதுடில்லி:நடப்பு, 2013–14ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 5.5 சதவீதமாக இருக்கும் என, பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சிலின் தலைவர், ரங்கராஜன் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது:அண்மையில், உலக வங்கி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், 4.7 சதவீதமாக சரிவடையும் என, தெரிவித்தது.இது, முந்தைய மதிப்பீட்டில், 6.1 சதவீதமாக இருக்கும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. இதே போன்று, சர்வதேச நிதியமும், நடப்பு நிதியாண்டில்இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 3.75 சதவீதமாகவும், அடுத்த நிதியாண்டில், 5.1 சதவீதமாக இருக்கும் என, அறிவித்து உள்ளது.
உண்மையில், உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியம், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை குறைத்து மதிப்பீடு செய்துள்ளன.ஏனெனில், நாட்டின் பல மாநிலங்களில், பருவமழை சிறப்பாக உள்ளது. இதையடுத்து, வேளாண் உற்பத்தி அதிகரித்து, கிராமப்புறங்களில் தேவை அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.மேலும், நடப்பு நிதியாண்டின், இரண்டாவது அரையாண்டில், தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி நிச்சயம் வேகமெடுக்கும் என, தெரியவந்து உள்ளது.
இதை மெய்ப்பிக்கும் விதமாக, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில், இந்தியாவின் ஏற்றுமதி, இரட்டை இலக்க வளர்ச்சி கண்டுள்ளது. இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும் பொழுது, நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதாரம், 5–5.5 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி காணும் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு, ரங்கராஜன் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|