பதிவு செய்த நாள்
25 அக்2013
00:59
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், நேற்று காலையில் துவங்கிய போது ஏற்றத்துடன் காணப்பட்டது. குறிப்பாக, கடந்த 2010ம் ஆண்டிற்கு பிறகு, முதன்முறையாக, சென்செக்ஸ், வர்த்தகத்தின் இடையே, 21,000 புள்ளிகளை கடந்தது.
இந்நிலையில், மதியத்திற்கு பிறகான வர்த்தகத்தில், முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி, பங்குகளை விற்பனை செய்ததையடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில் வியாபாரம் சரிவுடன் முடிவடைந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 42.45 புள்ளிகள் சரிவுஅடைந்து, 20,725.43 புள்ளிகளில் நிலைபெற்றது.
வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 21,039.42 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 20,656.70 புள்ளிகள் வரையிலும் சென்றது. சென்செக்ஸ் கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், விப்ரோ, கோல் இந்தியா, டி.சி.எஸ்., ஜிந்தால் ஸ்டீல் உள்ளிட்ட, 19 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், மகிந்திரா, எல் அண்டு டி, கெயில், உள்ளிட்ட, 10 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், ஸ்டெர்லைட் நிறுவனப் பங்கின் விலை மாற்றமின்றியும் இருந்தது.
தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டுஎண், நிப்டி, 14 புள்ளிகள் குறைந்து, 6,164.35 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 6,252.45 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 6,142.95 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|