பவர் கிரிட் கார்ப்­ப­ரேஷன் நிறுவனம் ரூ.4,650 கோடிக்கு பங்கு வெளியிட திட்டம்பவர் கிரிட் கார்ப்­ப­ரேஷன் நிறுவனம் ரூ.4,650 கோடிக்கு பங்கு வெளியிட திட்டம் ... தெலுங்­கானா போராட்­டம் எதிரொலி சேலத்தில் பட்டு சேலைகள் தேக்கம் தெலுங்­கானா போராட்­டம் எதிரொலி சேலத்தில் பட்டு சேலைகள் தேக்கம் ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
வரத்து உயர்வால் அரிசி விலை குறைகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2013
05:20

காரைக்­குடி:சீரான மழை பொழிவால், ஆலை­ க­ளுக்கு தட்­டுப்­பா­டின்றி நெல் வந்து கொண்­டுள்­ளது. இதன் கார­ண­மாக, அரிசி விலை கிலோ­வுக்கு, ஒன்று முதல் மூன்று ரூபாயும், நெல் விலை, மூட்­டைக்கு, 50 முதல் 100 ரூபாயும் குறைந்­து உள்­ளது.
தஞ்­சாவூர்:காரைக்­குடி அருகே உள்ள புது­வயல் மற்றும் பள்­ளத்­துாரில், 70-க்கும் மேற்­பட்ட அரிசி ஆலைகள் உள்­ளன. கர்­நா­டகா, ஆந்­திரா மற்றும் தமி­ழ­கத்தின் தஞ்­சாவூர் உள்­ளிட்ட பல பகு­தி­க­ளி­ல் இருந்தும், இங்கு நெல் வரத்து உள்­ளது.
கடந்த ஆண்டு மழை­யின்­மையால், நெல் வரத்து கணி­ச­மாக குறைந்­தது. கிணற்றுப் பாசனம், ஆற்றுப் பாசனம் மூலம் விவ­சாயம் மேற்­கொண்ட விவ­சா­யி­களும், நெல்லை தங்கள் தேவைக்­காக தேக்கி வைத்தி­ருந்­தனர்.இதனால், அரிசி ஆலைகள், ஆந்­திரா, கர்­நா­ட­கா­வி­லி­ருந்து வரும் நெல்லை மட்­டுமே நம்­பி­ இருந்­தன. 35 ரூபாய் விற்ற டீலக்ஸ் பொன்னி, விறு­வி­று­வென விலை­யேறி, 50 ரூபாய் வரை சென்­றது. வட­கி­ழக்கு பரு­வ­மழை, தற்­போது தலை காட்ட ஆரம்­பித்­துள்­ளது.
ஐப்­பசி மழையை நம்பி, ஆடியில் விதைத்த விவ­சா­யிகள், பெய்­துள்ள மழையால் மகிழ்ச்­சியில் உள்­ளனர். தேக்கி வைத்­தி­ருந்த நெல் விற்­ப­னைக்கு வரு­வதால், ஆலை­க­ளுக்கு நெல் வரத்து சீராக உள்­ளது.கடந்த ஒரு வாரத்தில், அரிசி கிலோ­வுக்கு, ஒன்று முதல், மூன்று ரூபாய் வரை குறைந்­துள்­ளது.
கடந்த வாரம், 40 ரூபாய்க்கு விற்ற டீலக்ஸ் பொன்னி, தற்­போது, 39 ரூபாய்க்கும், 30 ரூபாய்க்கு விற்ற அதி­சய பொன்னி, 27 ரூபாய்க்கும், 28 ரூபாய்க்கு விற்ற கோ– 45 அரிசி, 25 ரூபாய்க்கும், 30க்கு விற்ற சி.ஆர்., (இட்லி அரிசி), 27 ரூபாய்க்கும் விற்­கப்­படு­கி­றது. கல்சர் பழைய விலை­யி­லேயே கிலோ, 27 ரூபா­யாக உள்­ளது.
நெல் விலை:இதே போல் நெல்லின் விலையும் மூட்­டைக்கு (61 கிலோ) 50 முதல், 100 ரூபாய் வரை குறைந்­துள்­ளது. 1,400 ரூபாய்க்கு விற்ற டீலக்ஸ் பொன்னி, 1,380 ஆகவும், 900 க்கு விற்ற அதி­சய பொன்னி, 800க்கும், 900க்கு விற்ற கோ- 45 நெல், 800 ரூபா­யா­கவும் உள்­ளது.
சி.ஆர்., ரக நெல், தற்­போது வரத்து இல்லை என்­றாலும் இருப்பு உள்­ளது. புது­வயல் மில்­க­ளுக்கு தற்­போது வாரத்­துக்கு, 25 ஆயிரம் டன் நெல் வந்து கொண்­டுள்­ளது. புது­வயல் அரிசி ஆலை உரி­மை­யாளர் ஒருவர் கூறும்­போது, கடந்த ஒரு வாரத்தில், அரிசி விலை குறைந்­துள்­ளது. தீபா­வ­ளிக்கு பிறகு விலை மேலும் குறைய வாய்ப்­புள்­ளது என்றார்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)