பதிவு செய்த நாள்
26 அக்2013
05:20
காரைக்குடி:சீரான மழை பொழிவால், ஆலை களுக்கு தட்டுப்பாடின்றி நெல் வந்து கொண்டுள்ளது. இதன் காரணமாக, அரிசி விலை கிலோவுக்கு, ஒன்று முதல் மூன்று ரூபாயும், நெல் விலை, மூட்டைக்கு, 50 முதல் 100 ரூபாயும் குறைந்து உள்ளது.
தஞ்சாவூர்:காரைக்குடி அருகே உள்ள புதுவயல் மற்றும் பள்ளத்துாரில், 70-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் உள்ளன. கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் தஞ்சாவூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும், இங்கு நெல் வரத்து உள்ளது.
கடந்த ஆண்டு மழையின்மையால், நெல் வரத்து கணிசமாக குறைந்தது. கிணற்றுப் பாசனம், ஆற்றுப் பாசனம் மூலம் விவசாயம் மேற்கொண்ட விவசாயிகளும், நெல்லை தங்கள் தேவைக்காக தேக்கி வைத்திருந்தனர்.இதனால், அரிசி ஆலைகள், ஆந்திரா, கர்நாடகாவிலிருந்து வரும் நெல்லை மட்டுமே நம்பி இருந்தன. 35 ரூபாய் விற்ற டீலக்ஸ் பொன்னி, விறுவிறுவென விலையேறி, 50 ரூபாய் வரை சென்றது. வடகிழக்கு பருவமழை, தற்போது தலை காட்ட ஆரம்பித்துள்ளது.
ஐப்பசி மழையை நம்பி, ஆடியில் விதைத்த விவசாயிகள், பெய்துள்ள மழையால் மகிழ்ச்சியில் உள்ளனர். தேக்கி வைத்திருந்த நெல் விற்பனைக்கு வருவதால், ஆலைகளுக்கு நெல் வரத்து சீராக உள்ளது.கடந்த ஒரு வாரத்தில், அரிசி கிலோவுக்கு, ஒன்று முதல், மூன்று ரூபாய் வரை குறைந்துள்ளது.
கடந்த வாரம், 40 ரூபாய்க்கு விற்ற டீலக்ஸ் பொன்னி, தற்போது, 39 ரூபாய்க்கும், 30 ரூபாய்க்கு விற்ற அதிசய பொன்னி, 27 ரூபாய்க்கும், 28 ரூபாய்க்கு விற்ற கோ– 45 அரிசி, 25 ரூபாய்க்கும், 30க்கு விற்ற சி.ஆர்., (இட்லி அரிசி), 27 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. கல்சர் பழைய விலையிலேயே கிலோ, 27 ரூபாயாக உள்ளது.
நெல் விலை:இதே போல் நெல்லின் விலையும் மூட்டைக்கு (61 கிலோ) 50 முதல், 100 ரூபாய் வரை குறைந்துள்ளது. 1,400 ரூபாய்க்கு விற்ற டீலக்ஸ் பொன்னி, 1,380 ஆகவும், 900 க்கு விற்ற அதிசய பொன்னி, 800க்கும், 900க்கு விற்ற கோ- 45 நெல், 800 ரூபாயாகவும் உள்ளது.
சி.ஆர்., ரக நெல், தற்போது வரத்து இல்லை என்றாலும் இருப்பு உள்ளது. புதுவயல் மில்களுக்கு தற்போது வாரத்துக்கு, 25 ஆயிரம் டன் நெல் வந்து கொண்டுள்ளது. புதுவயல் அரிசி ஆலை உரிமையாளர் ஒருவர் கூறும்போது, கடந்த ஒரு வாரத்தில், அரிசி விலை குறைந்துள்ளது. தீபாவளிக்கு பிறகு விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது என்றார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|