பதிவு செய்த நாள்
26 அக்2013
05:22
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை அன்றும் மந்தமாகவே இருந்தது.
சர்வதேச நிலவரம் மற்றும் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்கு களை விற்பனை செய்தது போன்றவற்றால், இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் முடிவுஅடைந்தது.
பல முன்னணி நிறுவனங் களின் நிதி நிலை முடிவுகள், எதிர்பார்ப்பை விட குறைந்ததையடுத்து, ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுணக்கமாகவே இருந்தது.நேற்றைய வர்த்தகத்தில், ரியல் எஸ்டேட், பொறியியல், உலோகம் உள்ளிட்ட, பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.
அதேசமயம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் நுகர்வோர் சாதன துறைகளைச் சேர்ந்த, நிறுவனப் பங்குகளுக்கு மட்டும் தேவை காணப்பட்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 41.91 புள்ளிகள் சரிவடைந்து, 20,683.52 புள்ளிகளில் நிலைபெற்றது.
வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 20,782.16 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 20,622.55 புள்ளிகள் வரையிலும் சென்றது.
சென்செக்ஸ் கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ஹிண்டால்கோ, டாட்டா ஸ்டீல், மகிந்திரா, கெயில் உள்ளிட்ட, 21 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், டி.சி.எஸ்., விப்ரோ, என்.டி.பி.சி., உள்ளிட்ட, 8 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், ஐ.சி.ஐ.சி.ஐ. ேபங்க் பங்கின் விலை மாற்றமின்றியும் இருந்தது.
தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண், நிப்டி, 19.45 புள்ளிகள் குறைந்து, 6,144.90 புள்ளிகளில் நிலை கொண்டது.வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 6,174.75 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 6,125.95 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|