தங்கம் விலையில் மாற்றமில்லைதங்கம் விலையில் மாற்றமில்லை ... எரிபொருள் விலையை அதிகரிக்க அரசு முடிவு எரிபொருள் விலையை அதிகரிக்க அரசு முடிவு ...
இந்திய வெங்காயம் கிலோ 1-க்கு : உள்ளூரில் ரூ.80 வெளிநாட்டில் ரூ.45
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2013
12:41

மால்டா: இந்தியர்களின் இல்லங்களில் கண்ணீரை வரவழைக்கும் வகையில் ரூ.80 வரையில் விலை உயர்ந்துள்ள வெங்காயம் எல்லைப்பகுதியான வங்க தேசத்தில் ரூ.45-47க்கு கிடைக்கிறது. நடப்பு நிதியாண்டில் பற்றாக்குறை காரணமாக தங்கத்தின் விலையுடன் போட்டி போட்டுக்கொண்டு விலையேற்றத்தை கண்டும் வெங்காயத்தின் விலையை கண்டு நடுத்தரமக்கள் கலங்கி போய் உளளனர். கடந்த காலங்களில் இதே போன்ற வெங்காயத்தின் விலை உயர்வு காரணமாக ஆட்சி மாற்றம் கூட ஏற்பட்டது. இதனால் வெங்காயத்தின் விலையை கண்டு மக்களும் அரசியல் கட்சியினரும் கலங்கி போய் உள்ளனர்.
விலையை கட்டுப்படுத்துவதற்காக ஈரான், எகிப்து, பாகிஸ்தான், சீனா, ஆப்கான் ஆகிய வெளிநாடுகளி்ல் இருந்து இறக்குமதி செய்துவந்த போதிலும் ,எல்லைப்பகுதியான வங்க தேசத்தின் பல்வேறு நகர சந்தைகளில் நமது நாட்டின் வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றிற்கு ரூ.45-47 வரையில் மட்டுமே விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனையாகி வருகிறது.

ஒருபுறம் விலையை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிப்பதாக கூறினாலும் மறு பக்கத்தி்ல் எல்லைப்புற மாநிலமான மே.வங்கத்தில் உள்ள மால்டாவில் உள்ள மகாதிர்புர், பெட்ராபால், வடக்கு 24 பர்கானா மாவட்டத்தை சேர்ந்த கோஜாடங்கா, தெற்கு தினாஜ்பூர் மாவட்டத்தின் ஹிலி, மற்றும் கூச்பெகாரை சேர்ந்த சங்கராபந்தா ஆகிய பகுதி வழியாக தினசரி 500-600 டன்கள் வரையில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதுகுறித்து ஏற்றுமதியார்கள் ஒருங்கிணைப்புக்குழுவின் இணை செயலாளர் கூறுகையில் உஸ்வால்சாகா கூறுகையில் : வெங்காயத்தின் விலையை நிர்ணயிப்பது நேஷனல் அக்ரிகல்சுரல் கோ- ஆப்ரேவ்டிவ் மார்க்கெட்டிங் பெடரேஷன் ஆப் இந்தியா(நாபெட்) ஆகும். இந்த விலை நீண்ட காலத்திற்கு முன்பே நிர்ணயிக்கப்பட்டது. ஏற்றுமதி ஓப்பந்தமும் நீண்ட காலத்திற்கு முன்பே போடப்பட்டது. தற்போதைய சூழ்நிலையில் இந்த ஏற்றுமதியினால் விவாசாயிகளுக்கு லாபம் எதுவும் கிடைக்கவில்லை .மேலும் வட்டி நட்டம் தான் மீதமாகியுள்ளது. என தெரிவித்துள்ளார்.வங்க ஏற்றுமதியாளர்கள் சங்க கூட்டமைப்பை சேர்ந்த சமீர் கோஷ் கூறுகையில் நவம்பர்

மாதம் முதல் ஏற்றுமதி வரியை உயர்த்த இருப்பதால் எல்லைப்பகுதியிலும் அதிக விலையை காண முடியும் என தெரிவித்தார்.மால்டா வர்த்தக வியாபாரிகள்சங்க செயலாளர் ஜயந்தாகுண்டு கூறுகையில் விலைவாசி உயர்வுக்கு வர்த்தகர்கள் பொறுப்பாக முடியாது. அவர்கள் கள்ள சந்தையில் விற்பதில்லை. அரசு உடனடியாக வங்க தேசத்திற்கு ஏற்றுமதி செய்வதை தடை செய்தால் விலை உயர்வு தானாகவே கட்டுக்குள் வரும் என கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)