இந்திய வெங்காயம் கிலோ 1-க்கு : உள்ளூரில் ரூ.80 வெளிநாட்டில் ரூ.45இந்திய வெங்காயம் கிலோ 1-க்கு : உள்ளூரில் ரூ.80 வெளிநாட்டில் ரூ.45 ... என்.ஐ.டி., கட்டணம் உயர்வு என்.ஐ.டி., கட்டணம் உயர்வு ...
எரிபொருள் விலையை அதிகரிக்க அரசு முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2013
12:44

புதுடில்லி : இன்னும் சில நாட்களில், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகளை, மேலும் அதிகரிக்க, மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. எண்ணெய் நிறுவனங்களின் டீலர்களுக்கு கமிஷன் தொகையை அதிகரிக்க முடிவு செய்துள்ளதால், அவற்றின் சுமை, வாடிக்கையாளர் மீது ஏற்றப்படவுள்ளது. இதற்காக, தேர்தல் கமிஷனிடம், மத்திய அரசு அனுமதி கேட்டுள்ளது.
பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு, நாடு முழுவதும், 42,000 டீலர்கள் உள்ளனர். இவர்கள், தங்களுக்கான கமிஷன் தொகை, நீண்ட நாளாக உயர்த்தப்படாமல் இருப்பதாகவும், அதனால், பெட்ரோலுக்கு, லிட்டருக்கு, 42 பைசாவும், டீசலுக்கு, 27 பைசாவும், கமிஷன் தொகையை அதிகரிக்க வேண்டும் என்றும், நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர்.தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக, தங்களுக்கான கமிஷன் தொகையை அதிகரிக்காவிட்டால், ஸ்டிரைக்கில் ஈடுபடப் போவதாகவும், அவர்கள் எச்சரித்துள்ளனர். இதனால், அவர்களுக்கான கமிஷன் தொகையை, இன்னும் சில நாட்களுக்குள் அதிகரிக்க, மத்திய பெட்ரோலிய அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

அப்படி, கமிஷன் தொகை உயர்த்தப்பட்டால், அதனால் ஏற்பாடும் வருவாய் இழப்பு, வாடிக்கையாளர்கள் மீது சுமத்தப்படும். இதனால், இன்னும் சில நாட்களுக்குள், கமிஷன் தொகை உயர்த்தப்பட்டு, அதன்பின், எரிபொருள் விலையும் உயர்த்தப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், டில்லி, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், ம.பி., ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்த ஐந்து மாநிலங்களிலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.இதனால், இந்த நேரத்தில், கமிஷன் தொகையை உயர்த்துவது, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவதாக இருக்கும். ஆனாலும், இப்போது உயர்த்தப் படாவிட்டால், அடுத்தடுத்து, தேர்தல்கள் வரவுள்ளதால், இன்னும் ஆறு, ஏழு மாதங்கள் வரை, கமிஷன் தொகையை உயர்த்த முடியாது என, டீலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஒரே நேரத்தில்:கமிஷன் தொகையை, இந்த ஐந்து மாநிலங்களையும் தவிர்த்து விட்டு, மற்ற மாநிலங்களில் உயர்த்த முடியாது. ஒட்டு மொத்தமாக, நாடு முழுவதும், ஒரே நேரத்தில் உயர்த்தப்பட வேண்டும்.இதனால், டீலர்களுக்கான கமிஷன் தொகையை, உயர்த்துவதற்கு அனுமதிக்கும்படி, மத்திய பெட்ரோலிய அமைச்சகம் சார்பில், தேர்தல் கமிஷனிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக, அந்த அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)