பதிவு செய்த நாள்
26 அக்2013
13:32
கோல்கட்டா: எல்.இ.டீ டிவிகள் விற்பனை செப்டம்பர் மாதம் முதல் அதிகரித்துள்ளது. முன்னணி நிறுவனங்களின் விற்பனை 4 மடங்கு உயர்ந்துள்ளது.உள்நாட்டில் எல்.இ.டீ. தொலைக்காட்சி பெட்டிகளின் விலை 30–50 சதவீதம் அதிகமாக இருந்ததால் வெளிநாடுகளில் இருந்து மக்கள் வாங்கி வந்தனர். இந்த வகையில் நாள் ஒன்றுக்கு சுமார் 3,000 தொலைக்காட்சி பெட்டிகள் பயணிகள் உடமைகளுடன் சேர்ந்து வெளிநாடுகளில் இருந்து வந்து கொண்டு இருந்தது. இந்தியாவில் தொலைக்காட்சி பெட்டிகள் சந்தையில், பயணிகள் கொண்டு வரும் மற்றும் கள்ளச் சந்தையில் இறக்குமதி செய்யப்படும் எல்.இ.டீ. டிவிகள் பங்கு 20 சதவீதமாக இருந்தது. தற்போது இந்திய எல்.இ.டீ. டிவிகள் சந்தை மதிப்பு ரூ.20,000 கோடியாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இச்சந்தை வளர்ச்சி 15–20 சதவீதமாக குறைந்துள்ளது. இது 2009–11 ஆண்டுகளில் 75–80 சதவீதமாக உயர்ந்திருந்தது.மத்திய அரசு ஆகஸ்டு 26ம் தேதி முதல் பயணிகள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரும் தொலைக்காட்சி பெட்டிகளுக்கு 36 சதவீதம் இறக்குமதி வரி விதித்தது. இதனையடுத்து செப்டம்பர் மாதத்தில் உள்நாட்டில் விற்பனை சென்ற ஆண்டின் இதே மாதத்தைக் காட்டிலும் 75–80 சதவீதமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக சாம்சங், சோனி, எல்.ஜி. மற்றும் பானாசோனிக் ஆகிய நிறுவனங்களின் எல்.இ.டீ. விற்பனை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|