பதிவு செய்த நாள்
27 அக்2013
00:29
மும்பை:ஆயுள் காப்பீட்டு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும், லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்.ஐ.சி.,) நிறுவனத்தின் பங்கு முதலீடு, நடப்பு நிதியாண்டில், 40 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டும் என, இந்நிறுவனத்தின் தலைவர் எஸ்.கே.ராய் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:பல முன்னணி நிறுவனப் பங்குகளின் விலை, மிகவும் குறைவாக உள்ளது. இது, முதலீட்டிற்கு சிறந்த தருணம் என, கருதப்படுகிறது.இந்நிலையில், இதுவரையிலுமாக, நிறுவனப் பங்குகளில், 32 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, நடப்பு நிதியாண்டில், நிறுவனத்தின் பங்கு முதலீடு, 40 ஆயிரம் கோடியை தாண்டும் என, எதிர்பார்க்கிறோம்.
பங்கு வர்த்தகம் சூடுபிடிக்கும் நிலையில், லாப நோக்கம் கருதி, குறிப்பிட்ட அளவிற்கு பங்குகள் விற்பனை செய்யப்படும். அதேநேரத்தில், பங்குகளின் விலை குறையும் நிலையில் மீண்டும் முதலீடு மேற்கொள்ளப்படும்.நடப்பு நிதியாண்டில், புதிய பிரிமியம் வாயிலாக, 33 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. அக்டோபர் 15ம் தேதி வரையிலுமாக, புதிய பிரிமியம் வாயிலாக, 15 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது. எனவே, புதிய பிரிமிய வருவாய்க்கான இலக்கு, எட்டப்படும். இவ்வாறு ராய் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|