பதிவு செய்த நாள்
27 அக்2013
00:31
‘‘சர்க்கரைக்கான இறக்குமதி வரியை உயர்த்த, சர்க்கரை ஆலைகள் விடுத்துள்ள கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும்,’’ என, மத்திய உணவு அமைச்சர் கே.வி.தாமஸ் தெரிவித்தார்.கடந்த மூன்று நிதியாண்டுகளாக, இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி, உள்நாட்டு தேவையை விட அதிகரித்துள்ளது. நடப்பு, 2013–14ம் நிதியாண்டிலும், சர்க்கரை உற்பத்தி உபரியாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இறக்குமதி செய்யப்படும் சர்க்கரையாலும் தேக்கம் அதிகரித்துள்ளது. இது, சர்க்கரை விலை சரிவிற்கு வழி வகுத்துள்ளது.இத்தகைய காரணங்களால், சர்க்கரை இறக்குமதி மீதான வரியை உயர்த்த வேண்டும் என, சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.சர்க்கரை இறக்குமதிக்கு, தற்போது, 15 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இதை உயர்த்துவது தொடர்பான கோரிக்கை குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
உலக அளவில், சர்க்கரை உற்பத்தியில், பிரேசிலை அடுத்து, இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. உள்நாட்டில், தற்போது, 80 லட்சம் டன்னிற்கும் அதிகமாக சர்க்கரை இருப்பு உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.–பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து–
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|