பதிவு செய்த நாள்
28 அக்2013
01:14
வனிலா விலை விறு விறுவென உயர்ந்து வருவதால், கேரளா மற்றும் கர்நாடகா விவசாயிகள், அதன் சாகுபடியில் மீண்டும் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளனர்.பிஸ்கட், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களிலும், அழகு சாதனங் களிலும் வனிலா பயன்படுத்தப்படுகிறது. உலகளவில், வனிலா உற்பத்தியில் மடகாஸ்கர் நாடு முதலிடத்தில் உள்ளது.கடந்த 1999–2005ம் ஆண்டுகளில், மடகாஸ்கரில் வனிலா உற்பத்தி சரிவடைந்தது.இதனால், சர்வதேச சந்தை யில், வனிலா விலை உச்சத்திற்கு சென்றது.
இதையடுத்து, கேரளா, கர்நாடகா விவசாயிகள், வனிலா சாகுபடியில் ஆர்வம் காட்டத் துவங்கினர். பல விவசாயிகள், மாற்றுப் பயிராக, வனிலாவை தேர்ந்தெடுத்தனர். அந்த காலகட்டத்தில், ஒரு கிலோ வனிலா, 1,200 ரூபாய் வரை விலை போனது. நல்ல தரமான, ஒரு மீட்டர் நீளமுள்ள வனிலா, 100–150 ரூபாய்க்கு விற்கப்பட்டது.ஆனால், 2006ம் ஆண்டில் இருந்து, மடகாஸ்கரில், வனிலா உற்பத்தி, இயல்பு நிலைக்கு திரும்பத் துவங்கியது. இதன் காரணமாக, வனிலா விலை, மள மள வென வீழ்ச்சி கண்டது.ஒரு கிலோ வனிலாவின் விலை, 50 ரூபாயாக குறைந்தது. ஒரு மீட்டர் நீளமுள்ள வனிலா, ஒரு ரூபாய்க்கும் குறைவாக விலை போனது.இதனால் பாதிக்கப்பட்ட ஏராளமான விவசாயிகள், வனிலா சாகுபடியை கைவிட்டனர்.
இந்த நிலையில், கடந்த ஓராண்டாக, மீண்டும் வனிலா விலை உயரத் துவங்கியுள்ளது.குறிப்பாக, கடந்த ஒன்பது மாதங்களில், வனிலா விலை, 300 சதவீதம் அதிகரித்துள்ளது. 130–140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட, ஒரு கிலோ வனிலாவின் விலை, தற்போது, 400–600 ரூபாயாக உயர்ந்துஉள்ளது.ஒரு மீட்டர் நீளமுள்ள தரமான வனிலாவின் விலை, 20 ரூபாயாக அதிகரித்துள்ளது.தற்போது, வனிலா சந்தை சூடு பிடித்து உள்ளதால், கேரளா மற்றும் கர்நாடகா விவசாயிகள், வனிலா விவசாயத்தில் மீண்டும் ஈடுபடத் துவங்கியுள்ளனர்.
இது குறித்து, வனில்கோ நிறுவனத்தின் இயக்குனர் எம்.சி.சாஜூ கூறியதாவது:நிறுவனம் வசம், 400 கிலோ வனிலா எண்ணெய் உள்ளது. கடந்த ஆண்டு, ஒரு கிலோ வனிலா எண்ணெயின் விலை, 5,000 ரூபாயாக இருந்தது. இது, தற்போது, 20 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது.இவ்வாறு, அவர் தெரிவித்தார். – பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|