வனிலா சாகு­ப­டியில் விவ­சா­யிகள் சுறு­சு­றுப்பு:9 மாதங்­களில் 300 சத­வீதம் விலை உயர்வுவனிலா சாகு­ப­டியில் விவ­சா­யிகள் சுறு­சு­றுப்பு:9 மாதங்­களில் 300 சத­வீதம் ... ... விமான நிலை­யத்­திற்கு பாக்கி:விஜய் மல்­லையா மீது வழக்கு விமான நிலை­யத்­திற்கு பாக்கி:விஜய் மல்­லையா மீது வழக்கு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பொதுத்­துறை வங்­கிகளின் வசூ­லாகாத கடன் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2013
01:22

புது­டில்லி:பொதுத்­துறை வங்­கிகள், வசூ­லா­காத கடன்­களை வசூலிப்­பதில், மெத்­த­ன­மாக உள்­ள­தாக ஆய்வு ஒன்றில் தெரி­ய­வந்­துள்­ளது.மத்திய நிதி அமைச்சகம்நடப்பு நிதி­யாண்டின், ஏப்.,–ஜூன் வரை­யி­லான முதல் காலாண்டில், பொதுத்­துறை வங்­கிகள், 1,416 கோடி ரூபாய் என்ற அள­விற்கே, வசூ­லா­காத கடன்­களை வசூ­லித்­துள்­ளன.


அதே சமயம், இதே காலத்தில், இவ்­வங்­கி­களின் வசூ­லா­காத கடன், இத்­தொ­கையை விட, இரு மடங்கு அதி­க­ரித்­துள்­ளது.பொதுத்­துறை வங்­கி­களின் வசூ­லா­காத கடன்கள் உயர்ந்து வரு­வது குறித்து, அண்­மையில், மத்­திய நிதி அமைச்சர் ப.சிதம்­பரம், கவலை தெரி­வித்­தி­ருந்தார்.
இதை­ய­டுத்து, பொதுத்­துறை வங்­கிகள், அவற்றின் வசூ­லா­காத கடன் பிரிவில், முன்­ன­ணியில் உள்ள, 30 கணக்­கு­களை தேர்வு செய்து, கடனை வசூ­லிக்க நட­வ­டிக்கை எடு­க்க வேண்டும் என, மத்­திய நிதி­ய­மைச்­சகம், வங்­கி­களுக்கு உத்­த­ர­விட்­டுள்­ளது.பொதுத்­துறை வங்­கி­களில் முத­லி­டத்தில் உள்ள, ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தியா, நடப்பு நிதியாண்டின், முதல் காலாண்டில், வசூ­லா­காத கடன் பிரிவின் கீழ், 474 கோடி ரூபாயை வசூ­லித்­துள்­ளது.அதே சமயம், இதே காலத்தில், இவ்­வங்­கியின் வசூ­லா­காத கடன் பிரிவில், 1,196 கோடி ரூபாய் அதி­க­ரித்­துள்­ளது.

பெரிய நிறுவனங்கள்:அதா­வது, குறிப்­பிட்ட காலாண்டில், இவ்­வங்­கியின் வசூ­லா­காத கடன் குறை­ய­வில்லை. மாறாக, 722 கோடி ரூபாய் உயர்ந்­துள்­ளது.
வசூ­லித்த கடன் தொகையில், பெரும்­ப­குதி, சிறிய அளவில் கடன் பெற்­ற­வர்­க­ளிடம் இருந்தே வசூ­லிக்­கப்­பட்­டுள்­ளது.பெரிய நிறு­வ­னங்கள் பெற்ற பெரும்­பா­லான கடன்கள்,  மறு­சீ­ர­மைக்­கப்­பட்­டி­ருக்கும். அல்­லது அது தொடர்­பான பேச்­சு­வார்த்­தையில் வங்­கியும், கடன் வாங்­கிய நிறு­வ­னமும், ஈடு­பட்­டி­ருக்கும் என, நிதி­ய­மைச்­சக அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.சென்ற ஜூன் இறுதி நில­வரப்­படி, பொதுத்­துறை வங்­கிகள் அளித்த மொத்த கடனில், வசூ­லா­காத கடன், 3.99 சத­வீதம் அல்­லது, 1.92 லட்சம் கோடி ரூபா­யாக உள்ளது.  

இதில், முன்­ன­ணியில் உள்ள, 30 கணக்­கு­களின் கீழ், வசூ­லா­காமல் உள்ள தொகை, 63,671 கோடி ரூபா­யாக உள்­ளது. இது, பொதுத்­துறை வங்­கி­களின் மொத்த வசூ­லா­காத கடனில், 34.83 சத­வீ­த­மாகும். வங்­கி­களின் வசூ­லா­காத கடனில், பெரும்­பா­லான தொகை, 1 கோடி ரூபாய் மற்றும் அதற்கும் அதி­க­மாக வழங்­கப்­பட்ட கட­னாகும்.கண்காணிப்பு:வங்­கிகள், வசூ­லா­காத கடன்­களை வசூ­லிப்­பதில் மெத்­த­ன­மாக உள்ள நிலையில், அவற்றின் நட­வ­டிக்­கையை முடக்கும் முயற்­சி­யையும் கட­னா­ளிகள் மேற்­கொண்டு வரு­கின்­றனர்.இத்­த­கை­யோரை தீவி­ர­மாக கண்­கா­ணித்து, உரிய நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு, பொதுத்­துறை வங்­கி­ க­ளுக்கு, மத்­திய நிதி­ அமைச்­சகம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)