பதிவு செய்த நாள்
28 அக்2013
01:27
எள் வரத்து குறைந்துள்ளதால், அதன் விலை, கடந்த இருவாரங்களில், திடீரென்று இருமடங்கு உயர்ந்துள்ளது. இதனால், நடப்பு பருவத்தின் துவக்கத்தில், எள் ஏற்றுமதிக்கு குறைந்த விலையை குறிப்பிட்டு முன்பேர ஒப்பந்தம் செய்து கொண்டவர்கள், இழப்பை சந்தித்துள்ளனர்.நாட்டின் மொத்த எள் உற்பத்தியில், 80–90 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகள், அதிக அளவில் இந்தியாவில் இருந்து எள்ளை இறக்குமதி செய்து கொள்கின்றன.
நாட்டின் எள் உற்பத்தி நன்கு இருக்கும் என்ற எதிர்பார்ப்பில், பல ஏற்றுமதியாளர்கள், நவம்பர், டிசம்பர் மாதங்களில் அனுப்ப உள்ள எள்ளின் விலையை, சராசரியாக, 20 கிலோவிற்கு, 1,800 ரூபாய் என, நிர்ணயித்து, ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர்.ஆனால், எள் அதிகம் விளையும், குஜராத் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில், கடும் மழை காரணமாக, அதன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.இதனால், சந்தைகளுக்கு எள் வரத்து குறைந்து, அதன் விலை உயர்ந்துள்ளது. கடந்த இரு வாரங்களில், 20 கிலோ எள் விலை, 3,000–3,100 ரூபாயாக அதிகரித்துள்ளது."இந்த விலை உயர்வை எதிர்பார்க்காத ஏற்றுமதியாளர்களுக்கு, இழப்பு ஏற்பட்டுள்ளது" என, அகமதாபாத்தை சேர்ந்த விளைபொருள் வல்லுனர் பிரன் வக்கீல் தெரிவித்தார்.
சந்தையில் அதிக விலைக்கு எள் வாங்கி, ஏற்கனவே ஒப்புக் கொண்ட குறைந்த விலையில், ஏற்றுமதி செய்ய வேண்டிய நிலையில் ஏற்றுமதியாளர்கள் உள்ளனர். இழப்பை சந்திக்க அஞ்சி, ஒப்பந்தப்படி, எள்ளை ஏற்றுமதி செய்யத் தவறுவோரின் மதிப்பு, சர்வதேச சந்தையில் சீர்குலையும் என, அவர் மேலும் கூறினார்.வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில், எள் விலை தொடர்ந்து உச்சத்தில் இருக்கும் பட்சத்தில், ஏற்றுமதியாளர்களுக்கு பெருத்த இழப்பு ஏற்படும்.இது குறித்து, குஜராத்தை சேர்ந்த எள் ஏற்றுமதியாளர் ஒருவர் கூறியதாவது:லாபமோ, இழப்போ, ஒப்பந்தப்படி, நாங்கள் எள்ளை ஏற்றுமதி செய்வோம். விலையை மறுபரிசீலனை செய்வது குறித்த பேச்சுக்கே இடமில்லை. வர்த்தகத்தில் இதெல்லாம் சகஜம் தான். இவ்வாறு, அவர் கூறினார்.– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|