விமான நிலை­யத்­திற்கு பாக்கி:விஜய் மல்­லையா மீது வழக்குவிமான நிலை­யத்­திற்கு பாக்கி:விஜய் மல்­லையா மீது வழக்கு ... ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.61.52 ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.61.52 ...
எள் விலை உயர்ந்ததால்ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்கு இழப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2013
01:27

எள் வரத்து குறைந்­துள்­ளதால், அதன் விலை, கடந்த இரு­வா­ரங்­களில், திடீ­ரென்று இரு­ம­டங்கு உயர்ந்­துள்­ளது. இதனால், நடப்பு பரு­வத்தின் துவக்­கத்தில், எள் ஏற்­று­ம­திக்கு குறைந்த விலையை குறிப்­பிட்டு முன்­பேர ஒப்­பந்தம் செய்து கொண்­ட­வர்கள், இழப்பை சந்­தித்­துள்­ளனர்.நாட்டின் மொத்த எள் உற்­பத்­தியில், 80–90 சத­வீதம் ஏற்­று­மதி செய்­யப்­படு­கி­றது. அமெ­ரிக்கா, ஜப்பான், தென் கொரியா உள்­ளிட்ட நாடுகள், அதிக அளவில் இந்­தி­யாவில் இருந்து எள்ளை இறக்­கு­மதி செய்து கொள்­கின்­றன.
நாட்டின் எள் உற்­பத்தி நன்கு இருக்கும் என்ற எதிர்­பார்ப்பில், பல ஏற்­று­ம­தி­யா­ளர்கள், நவம்பர், டிசம்பர் மாதங்­களில் அனுப்ப உள்ள எள்ளின் விலையை, சரா­ச­ரி­யாக, 20 கிலோ­விற்கு, 1,800 ரூபாய் என, நிர்­ண­யித்து, ஒப்பந்தம் செய்து கொண்­டுள்­ளனர்.ஆனால், எள் அதிகம் விளையும், குஜராத் உள்­ளிட்ட ஒரு சில மாநி­லங்­களில், கடும் மழை கார­ண­மாக, அதன் உற்­பத்தி பாதிக்கப்­பட்­டுள்­ளது.இதனால், சந்­தை­க­ளுக்கு எள் வரத்து குறைந்து, அதன் விலை உயர்ந்­துள்­ளது. கடந்த இரு வாரங்­களில், 20 கிலோ எள் விலை, 3,000–3,100 ரூபா­யாக அதிக­ரித்­துள்­ளது."இந்த விலை உயர்வை எதிர்­பார்க்­காத ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்கு, இழப்பு ஏற்­பட்டுள்­ளது" என, அக­ம­தா­பாத்தை சேர்ந்த விளை­பொருள் வல்­லுனர் பிரன் வக்கீல் தெரி­வித்தார்.
சந்­தையில் அதிக விலைக்கு எள் வாங்கி, ஏற்­க­னவே ஒப்புக் கொண்ட குறைந்த விலையில், ஏற்­று­மதி செய்ய வேண்­டிய நிலையில் ஏற்­று­ம­தி­யா­ளர்கள் உள்­ளனர். இழப்பை சந்­திக்க அஞ்சி, ஒப்­பந்­தப்­படி, எள்ளை ஏற்­று­மதி செய்யத் தவ­று­வோரின் மதிப்பு, சர்வதேச சந்­தையில் சீர்­கு­லையும் என, அவர் மேலும் கூறினார்.வரும் நவம்பர், டிசம்பர் மாதங்­களில், எள் விலை தொடர்ந்து உச்­சத்தில் இருக்கும் பட்­சத்தில், ஏற்­று­ம­தி­யா­ளர்­களுக்கு பெருத்த இழப்பு ஏற்­படும்.இது குறித்து, குஜ­ராத்தை சேர்ந்த எள் ஏற்­று­ம­தி­யாளர் ஒருவர் கூறி­ய­தா­வது:லாபமோ, இழப்போ, ஒப்­பந்­தப்­படி, நாங்கள் எள்ளை ஏற்­று­மதி செய்வோம். விலையை மறு­ப­ரி­சீலனை செய்­வது குறித்த பேச்­சுக்கே இட­மில்லை. வர்த்­த­கத்தில் இதெல்லாம் சகஜம் தான். இவ்­வாறு, அவர் கூறினார்.– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)